சினிமா

விஜய்க்கு பிறகு தற்போது தனுஷ்

Published On 2017-11-18 07:18 GMT   |   Update On 2017-11-18 07:18 GMT
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான ‘மெர்சல்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அட்லி இயக்கிய இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி திரைக்கு வந்தது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான வசனங்கள், மருத்துவ துறை முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் பேசப்பட்டன.

இந்த படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் ‘அதிரிந்தி’ படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், அங்கும் வசூல் சாதனை படைத்துள்ளது.



இந்நிலையில், மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக  ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனுஷ் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Tags:    

Similar News