சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்படும் மதுபாலா

Published On 2017-10-13 07:39 GMT   |   Update On 2017-10-13 07:39 GMT
‘ரோஜா’ படத்தில் நாயகியாக நடித்து பிரபலம் ஆன மதுபாலா, மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்க தான் ஆவலுடன் இருப்பதாக கூறியிருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் நாயகியாக நடித்து பிரபலம் ஆனவர் மதுபாலா. இவர் அளித்த பேட்டி....

‘ரோஜா படம் வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் பல உண்டு. என்றாலும், ‘ரோஜா’ எனக்கு ஸ்பெ‌ஷலான படம். இத்தனை வருடங்கள் ஆன பிறகும் இந்த படத்தை நினைவு வைத்திருக்கிறார்கள். மணிரத்னம் சாரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். அதை நினைவூட்ட அவ்வப்போது மணிரத்னம் சாரை சந்தித்து பேசுவேன். தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், எனக்கு பிடித்த மாதிரி எதுவும் அமையவில்லை. குறிப்பிட்ட நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.



படங்களை இயக்கும் எண்ணமும் தோன்றுகிறது. ஆனால் அதற்குரிய தொழில்நுட்ப அனுபவம் எனக்கு இல்லை. எனது நண்பர்களில் சிலர் சிறந்த ஒளிப்பதிவாளர்கள். என்னை படங்களை இயக்குவதற்கு அவர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள். என்றாலும், தைரியம் வரவில்லை என்றாவது ஒருநாள் நான் படம் இயக்கலாம்”.

Tags:    

Similar News