சினிமா

நவம்பரில் ரிலீசாகும் செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை'

Published On 2017-10-07 07:03 GMT   |   Update On 2017-10-07 07:03 GMT
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா நடிப்பில் உருவாகி பலமுறை தள்ளிப்போகி வரும் `நெஞ்சம் மறப்பதில்லை' படம் விரைவில் ரிலீஸாக இருப்பதாக கூறப்படுறது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தொடர்ந்து தள்ளிப்போகி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 3 வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் என்பதால், ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா மனைவியாக நந்திதா ஸ்வேதா நடித்திருக்கிறார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா பேயாக நடித்திருக்கிறார்.



யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் படத்தை வருகிற நவம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நவம்பர் 3-ஆம் தேதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அதே தேதியில் சுசீந்திரனின் `நெஞ்சில் துணிவிருந்தால்', சுசிகணேசனின் `திருட்டு பயலே 2' படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா என்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் சார்பில் மதன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News