சினிமா

ஹூமா குரேஷிக்கு விடுமுறை கொடுத்த காலா

Published On 2017-09-20 13:07 GMT   |   Update On 2017-09-20 13:07 GMT
ரஜினியின் காலா படத்தில் நடித்து வரும் ஹூமா குரேஷி, படப்பிடிப்பில் இருந்து விடுமுறை கேட்டு துபாயில் நடக்கும் விழாவிற்கு செல்கிறார்.
ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. ரஞ்சித் இயக்கும் இதில் இந்தி நடிகை ஹூமா குரேஷியும் நடிக்கிறார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், தனக்கு 2 நாட்கள் விடுமுறை வேண்டும் என்று ரஞ்சித்திடம் கேட்டார்.

இதற்கான காரணத்தை கூறிய அவர், “ஆசிட் வீச்சு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களை கவுரவிக்கும் விழா துபாயில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளவே 2 நாள் விடுமுறை கேட்கிறேன்” என்று தெரிவித்தார். இதனால் ஹூமா குரேஷிக்கு விடுமுறை வழங்க ரஞ்சித் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து இன்று ஹூமா குரேஷி சென்னையில் இருந்து துபாய் செல்கிறார். நாளை துபாயில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இதுபற்றி குறிப்பிட்டுள்ள ஹூமா, “தைரியமானவர்கள் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘காலா’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடந்து வருகிறது. இன்னும் சுமார் ஒரு மாதம் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ‘காலா’ அடுத்த ஆண்டு தமிழ்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News