சினிமா

மகேஷ் பாபு, விஜய்யை அடுத்து ரஜினிகாந்த் : ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த அதிரடி

Published On 2017-08-23 10:29 GMT   |   Update On 2017-08-23 10:29 GMT
ரஜினி தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘2.O’ படமும், ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களுக்கு பிறகு முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ் பாபுவை வைத்து ‘ஸ்பைடர்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை முடித்து விட்டு, விஜய் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கியுள்ளார்.



விஜய் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ரஜினி நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்துள்ளதாக கூறியுள்ளார். இது உறுதியாகும் நிலையில், இப்படத்திற்கான பணிகள் அடுத்தாண்டு இறுதியில் தொடங்கும் என ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருக்கிறார்.

முருகதாஸ் தற்போது இயக்கி வரும் ‘ஸ்பைடர்’ படத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவரும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் செப்டம்பர் மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
Tags:    

Similar News