சினிமா

சாப்பாட்டை விட ‘செக்ஸ்’ முக்கியம்: மனம் திறந்த சமந்தா

Published On 2017-07-17 10:06 GMT   |   Update On 2017-07-17 10:06 GMT
சாப்பாட்டை விட ‘செக்ஸ்’ தான் முக்கியம் என்று தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா மனம் திறந்து கூறியிருக்கிறார்.
சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் வருகிற அக்டோபர் மாதம் திருமணம் நடைபெறுகிறது.

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறி உள்ளார். பத்திரிகையாளர்கள். சமந்தாவிடம் ‘திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா? என்று கேட்டு விட்டால் ஆவேசப்படுகிறார்.

“இந்த கோள்வியை ஒரு டாக்டரிடம், ஆசிரியரிடம், என்ஜீனியரிடம் கேட்க முடியுமா? நடிகைகள் என்றால் வீட்டிலேயே முடங்கி விட வேண்டுமா” என்று எதிர்கேள்வி கேட்கிறார். இந்த நிலையில், பிரபல பத்திரிகைக்காக புகைப்படங்களுக்கு சமந்தா போஸ் கொடுக்க வந்தார். அப்போது அவரிடம் உணவு பற்றியும், செக்ஸ் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சமந்தா, “ எப்போது வேண்டுமானாலும் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கலாம். ஆனால் செக்ஸ் முக்கியம். அது இல்லாமல் முடியாது” என்று கூறியுள்ளார்.

அவரது இந்த மனம் திறந்த பதில் திரை உலகினரை வியப்படைய வைத்துள்ளது. ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News