சினிமா

கேளிக்கை வரி பிரச்சனை: திரை உலகினர் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும்- கமலஹாசன்

Published On 2017-07-04 10:02 GMT   |   Update On 2017-07-04 10:02 GMT
கேளிக்கை வரி பிரச்சனையில் திரை உலகினர் ஒரே குரலில் எதிர்க்க வேண்டும் என்று கமலஹாசன் கூறினார். இதுகுறித்த செய்தியை விரிவாக பார்ப்போம்...
சினிமா டிக்கெட்டுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியுடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் வசூலிப்பதால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் 1000 சினிமா தியேட்டர்கள் காம்ப்ளக்ஸ் தியேட்டர்கள் இன்று 2-வது நாளாக மூடப்பட்டுள்ளன.

சினிமாவுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க நடிகர் கமலஹாசன் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று தியேட்டர் அதிபர்கள் போராட்டம் பற்றி கமலஹாசனிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி., கேளிக்கை வரி பிரச்சனையில் சினிமா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும், நாம் அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News