சினிமா
பாகுபலி ஹீரோவுக்கு வில்லனான விஜய் பட வில்லன்
‘பாகுபலி’ படத்தின் ஹீரோவான பிரபாஸுக்கு விஜய்க்கு வில்லனாக நடித்தவர் வில்லனாகியுள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படத்தின் கதாநாயகனாக நடித்தவர் பிரபாஸ். இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 5 வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமலேயே இருந்து வந்தார். தற்போது ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடர்ந்து ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக கத்ரீனா கைப், ப்ரிணிதி சோப்ரா, பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நீல் நிதின் முகேஷ், விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இப்படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக கத்ரீனா கைப், ப்ரிணிதி சோப்ரா, பூஜா ஹெக்டே, அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக நீல் நிதின் முகேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நீல் நிதின் முகேஷ், விஜய் நடிப்பில் வெளிவந்த ‘கத்தி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் என்பவர் இயக்குகிறார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.