சினிமா

ரஜினி படத்தில் தேசிய விருது நடிகர்?

Published On 2017-05-24 06:08 GMT   |   Update On 2017-05-24 06:08 GMT
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிற புதிய படத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார்.
‘கபாலி’ வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும், ‘கபாலி’ படத்தில் பணியாற்றிய முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திலும் பணியாற்றவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு கடந்த சில தினங்களாக கதாநாயகி தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அதில் கடைசியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சமுத்திரகனி ‘விசாரணை’ படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மும்பை பின்னணியில் தாதா கதையாக உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் விவரங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News