சினிமா

விக்ரமை பிரிந்த தமன்னா

Published On 2017-05-21 12:21 GMT   |   Update On 2017-05-21 12:21 GMT
விக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படப்பிடிப்பில் இருந்து தமன்னா பிரிந்து போயுள்ளார்.
‘பாகுபலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமன்னா தற்போது சிம்புவின் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இதில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே முடிந்துவிட்டது.

இந்நிலையில், விக்ரமுடன் ‘ஸ்கெட்ச்’ படத்தில் மட்டும் நடித்துக் கொண்டு வந்தார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பையும் தமன்னா முடித்துவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் இவருடன் ஐஸ்வர்யா ராஜேஷும் இன்னொரு ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



‘ஸ்கெட்ச்’ படத்தை சிம்புவை வைத்து ‘வாலு’ படத்தை எடுத்த விஜய் சந்தர் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அடுத்த மாத இறுதியில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. 
Tags:    

Similar News