சினிமா

ரஜினியை அடுத்து உதயநிதியை தேர்வு செய்த பிரபல நிறுவனம்

Published On 2016-06-21 13:35 GMT   |   Update On 2016-06-21 13:35 GMT
ரஜினியை வைத்து படம் தயாரித்து வரும் நிறுவனம், அடுத்ததாக உதயநிதியை வைத்து படம் தயாரிக்க இருக்கிறது.
உதயநிதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மனிதன்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக 50 நாட்களையும் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை அகமது இயக்கியிருந்தார். ஹன்சிகா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்தின் வெற்றியை அடுத்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை அடுத்து சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.ஓ’ படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த படத்தை விக்ரம் பிரபுவின் ‘சிகரம் தொடு’ படத்தை இயக்கிய கவுரவ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிரது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 

Similar News