ஆட்டோமொபைல்
விற்பனையில் புது மைல்கல் கடந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவை பூர்விகமாக கொண்டு இயங்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான ஆம்பியர் எலெக்ட்ரிக் இந்திய சந்தையில் 75 ஆயிரம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து உள்ளது. இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், புது மைல்கல்லை தற்சமயம் எட்டியுள்ளது.
விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதை தொடர்ந்து ஆம்பியர் தனது 300-வது விற்பனையகத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் துவங்கி உள்ளது. கொரோனாவைரஸ் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் ஆம்பியர் எலெக்ட்ரிக் நாடு முழுக்க 80 விற்பனையகங்களை துவங்கி இருக்கிறது.
சமீபத்திய அறிக்கையின் படி இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் விற்பனை அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலகில் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் மத்திய அரசின் பசுமை போக்குவரத்து திட்டம் பற்றிய விழிப்புணர்வே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.