கன்னி - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

Published On 2023-04-15 11:21 GMT   |   Update On 2023-04-15 13:33 GMT

இளமையை விரும்பும் கன்னி ராசியினரே இதுவரை ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரித்த குருபகவான் அஷ்டம ஸ்தானம் எனும் எட்டாமிடம் நோக்கிச் செல்கிறார்.அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

கன்னி ராசிக்கு குருபகவான்

4,7 எனும் இரு கேந்திரங்களுக்கு அதிபதி. சுகாதிபதி, களத்திர ஸ்தான அதிபதி அஷ்டம ஸ்தானம் செல்கிறார். அஷ்டம ஸ்தானம் அசிங்கம், அவமானம், விபத்து, கண்டம், அறுவை சிகிச்சை, ஆயுள் பற்றிக் கூறுமிடம். அதே போல் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கூறுமிடமும் இதுதான். எனினும் அஷ்டம குரு சிறப்பித்துச் சொல்லக் கூடிய பலன் அல்ல. ராசி பலன் பார்ப்பது, கிரகப் பெயர்ச்சி பற்றி தெரிந்து கொள்வது எதற்காக? கோட்சார கிரகங்கள் சாதகமாக இருக்கும் காலங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். எதார்த்தமாக வாழ்க்கையை நடத்தலாம்.கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருக்கும் காலங்களில் புதிய செயல்களை தவிர்த்து விழிப்புடன் செயல்பட வேண்டும். இதுவே ஜோதிடம் கூறும் தீர்வு. இப்பொழுது கன்னி ராசிக்கு கோட்சார சனி ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் இருக்கிறார். குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அக்டோபர் 30, 2023 வரை ராகு கேதுக்கள் 8, 2 ம்மிடத்திலும் அதன் பிறகு 7, 1ம் மிடத்திலும் சஞ்சரிப்பார்கள். அனைத்து வருட கிரகங்களின் சஞ்சாரமும் சற்று சுமாராக இருப்பதால் புதிய முதலீடுகளை தவிர்த்து இறை வழிபாட்டில் ஈடுபட பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. அதே நேரத்தில் சுய ஜாதக ரீதியான நல்ல தசாபுத்திகள் நடந்து கொண்டு இருந்தால் எந்த பாதிப்பும் இருக்காது. சுப பலன்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். எனவே உங்கள் சிந்தனைகள் யாவும் தொலைநோக்குடன் இருக்க வேண்டும். தேவையற்ற பயத்தைத் தவிர்த்து சுய ஜாதக தசா புத்திக்கு தகுந்த வழிபாட்டு முறைகளை கடைபிடித்து பயன் பெற வாழ்த்துக்கள்.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள் :

ராசிக்கு 12ம்மிடமான விரய அயன, சயன, வெளிநாட்டுப் பயணம் பற்றிக் கூறும் ஸ்தானத்திற்கு பதிகிறது. விரயங்கள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் நகை வாங்குவது, வீடு கட்டுவது, பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு சேமிப்பது என உங்கள் விரயத்தை சுபமாக மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.அவசியம் அநாவசியம் எது என பகுத்துணர்ந்து செயல்பட்டால் விரயத்தை தவிர்கலாம். அத்துடன் தொழில், வேலைக்காக பலர் குடும்பத்தை பிரிந்து வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். சிலருக்கு கால் அல்லது கண் பிரச்சனைக்காக வைத்தியம் செய்ய நேரும்.எவ்வளவு மனபாரம் இருந்தாலும் படுத்த அடுத்த நொடி நிம்மதியாக கவலை மறந்து நிம்மதியாக தூங்கி விடுவீர்கள். இது குருபகவான் உங்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் ஏழாம் பார்வை பதிவதால் குடும்பம் கோவிலாக இறைவனின் இருப்பிடமாக இருக்கும்.அதிகார தோரணையான பேச்சில் அனைவரையும் கட்டிப் போடுவீர்கள். பேச்சில் தைரியம், தன் நம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும்.சொல் வலிமை, வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களின் ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் உருவாகும். பேச்சுத் திறமையால் வருமானத்தை அதிகரிப்பீர்கள். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தால் நிமிர்ந்து நிற்கும்.குடும்பத்திற்கு நிலையான நிரந்தரமான வருமானத்திற்கான வழி தென்படும். விரயங்கள் இருந்தாலும் இல்லை என்ற நிலை இருக்காது. பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

ராசிக்கு நான்காமிடமான சுக ஸ்தானத்திற்கு குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் மனதில் அவ்வப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலர் பயன்படாத பழைய சொத்துக்களை கொடுத்து விட்டு புதிய சொத்துக்கள் வாங்கலாம்.புதிய வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. எப்பொழுதோ வாங்கிப் போட்ட சொத்துக்களின் மதிப்பு உயர்ந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும். தாயின் அன்பு ஆசிர்வாதம், ஆதரவு மகிழ்ச்சியைத் தரும். எவ்வளவு வேலைப் பளு மனக்கஷ்டம் இருந்தாலும் சுக ஸ்தானத்தில் பதியும் குருப் பார்வை ஆரோக்கியத் தொல்லைகளை சீராக்கும்.ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சுற்றுப் பயணம் சென்று மகிழ்வீர்கள்.

அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.4.2023 முதல் 21.6.2023 வரை

கோட்சாரத்தில் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும்.குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள். பிள்ளை பேறு இல்லாதவர்களுக்கு புத்திர பிராப்தம் உண்டாகும். வீட்டில் ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பாலிசி முதிர்வு தொகை, எதிர்பாராத பண வரவு உண்டு.

பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்- 22.6.2023 முதல் 17.4.2024 வரை

கன்னி ராசிக்கு 2,9ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் வாக்கு வன்மை பெறும். வாக்கு பலிதம் உண்டாகும். பேச்சில் தெய்வத்தன்மை வெளிப்படும்.ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அறுசுவை உணவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களும் ஜாதகரும் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாக அன்பாக இருப்பார்கள். தனவிருத்தி உண்டு.

ஆசிரியர், ஜோதிடம், சட்டம், புரோகிதம், கூட்டுத் தொழில், உணவுத்தொழில், அயல்நாட்டு தொடர்பு போன்ற தொழில்களில் நல்ல வருமானம் உண்டாகும். தந்தை ,தந்தை வழி உறவினர்கள் மூலம் சொத்து ஆதாயம், குலத் தொழில் வருமானம், உண்டு. பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்- 18.4.2024 முதல் 30.4.2024 வரை

கன்னி ராசிக்கு விரயாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் பல வருடமாக எதிர்பார்த்த வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுதியாகும்.கண் பாதிப்பு இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை வங்கி பாதுகாப்பில் வைக்கவும். சொத்துகள் வாங்கும் பொழுது, விற்கும் போதும் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம்.தேவையற்ற வம்பு, வழக்குகளில் ஆர்வத்தை குறைப்பது நல்லது. பூர்வீக சொத்து பிரச்சனையை ஒத்தி வைக்கவும்.

குருவின் வக்ர பலன்கள் :

4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும். விரயங்கள் குறையும். சேமிப்பு உயரும். பணத்தைப் பார்த்த சில போலியான உறவுகள் உண்மையானவர்கள் போல் நடிப்பார்கள். கடன் சுமை குறையத் துவங்கும்.

பெண்கள்:

நீண்ட நாட்களாக தடைபட்ட பெரிய செயல்களைக் கூட எளிதாக செய்து முடித்து வெற்றியைக் கொண்டாடுவீர்கள்.குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் வேதனைகளும், துயரங்களும் விலகும். தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டிய காலம். வீட்டிற்கு தெரியாமல் நகைச் சீட்டு, ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் சேமிக்கவும்.

மாணவர்கள்:

மாணவர்களின் பேச்சாற்றல் பளிச்சிடும். பேச்சுத் திறமையால் பல வெற்றிகளை பெறுவீர்கள். சிலர் உயர் கல்விக்கு வெளிநாடு செல்லலாம். படிப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி பாஸ் பண்ண உரிய காலம். க்க கூடாது. குறுகிய கால பயிர்கள், காய்கனிகள் நல்ல லாபம் பெற்றுத் தரும்.அரசின் மானியம் கிடைப்பதில் தடை தாமதம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள்:

அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊதிய உயர்வுடன் இடம் மாற்றம் கிடைக்கும். ஆனால் உயர் அதிகாரிகளால் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும். வேலைப் பளு மன சஞ்சலத்தை அதிகரிக்கும். தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களுக்கு வேறு நல்ல வேலை கிடைக்காதா என்ற ஆதங்கம் மேலோங்கும் . இருக்கும் வேலையை விடக் கூடாது.

ராகு/கேது பெயர்ச்சி:

அக்டோபர் 30,2023ல் ராகு 7ம் இடத்திற்கும், கேது ராசிக்கும் இடம் பெயருகிறார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். சிலர் கருத்து வேறுபாட்டால் பிரியலாம்.

பரிகாரம் :

தேவையில்லாமல் கவலைப்படுவதைத் தவிர்த்திடுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இறைவன் சோதித்தால் விரைவில் நல்ல காலம் வரப்போகிறது என்று பொருள். ஜென்ம நட்சத்திர நாளில் கோவில் குளத்து மீனுக்கு பொரி போடவும். நேரம் கிடைக்கும் போது திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட்டு வர நவகிரகங்களும் துணை நிற்கும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News