தனுசு - குருப்பெயர்ச்சி பலன்கள்
null

குருபெயர்ச்சி பலன்-2024

Published On 2024-04-16 06:10 GMT   |   Update On 2024-04-16 06:35 GMT

தனுசு-சஷ்டம குரு 45%

ராஜயோகம் நிறைந்த தனுசு ராசியினரே!

இதுவரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் மே1, 2024 அன்று ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்கிறார். சனிபகவான் முயற்சி ஸ்தானத்திலும், ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

சஷ்டக குருவின் பொதுபலன்கள்

தனுசு ராசியின் அதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதியுமான குரு பகவான் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்கிறார். ராசி மற்றும் சுக ஸ்தான அதிபதியான குருபகவான் 6ம்மிடம் செல்வது சற்று ஏற்ற இறக்கமான பலன்களை ஏற்படுத்தும். ஆறில் குரு ஊரில் பகை. 6ம்மிடம் என்பது உப ஜெய ஸ்தானமாக இருத்தாலும் ராசி அதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதி 6ம்மிடம் செல்லும் போது கடன் நோய், எதிரி, வழக்கு சார்ந்த விஷயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

கடுமையாக உழைத்து உழைப்பிற்கான ஊதியம் நற்பெயர், அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நேரம். அவசியமின்றி வேலையை மாற்றக்கூடாது. சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டு அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள்.

சிலர் கடன் பட்டு அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவார்கள். பெண்களால் காதல் மற்றும் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம் என்பதால். கவனமாக இருப்பது நல்லது.

குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

குருவின் 5ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. 10ல் ஒரு பாவி இருப்பது நல்லது. 10ல் உள்ள பாவி கேதுவை 6ல் நிற்கும் குரு பார்ப்பது தனுசு ராசிக்கு சற்று சுமாரான பலன். கடன் பெற்று புதிய தொழில் துவங்குவது அல்லது வியாபாரத்தில் அதிக கடனுக்கு பொருளை விற்பது போன்றவற்றை இந்த ஓராண்டு காலம் தவிர்க்க வேண்டும். கமிஷன் அடிப்படையிலான முதலீடற்ற தொழில் நடத்துபவர்களுக்கு மிக மிக சாதகமான பலன் கிடைக்கும்.

கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. சுய தொழில் புரிபவர்கள் தொழிலில் புதிய திட்டங்களை மாற்றங்களை சுய ஜாதக பரிசீலினைக்கு பின் செயல்படுத்துவது நல்லது.

எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். பலதலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மிகுதியாகி வழக்கு பதியப்படலாம். புத்திரம் இல்லாதவர்களுக்கு குல தெய்வமே குழந்தையாக பிறக்கும்.

குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

குருவின் 7ம் பார்வை ராசிக்கு 12ம்மிடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் பதிகிறது.பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவைற்றை கவனமாக கையாள வேண்டும். கோர்ட், கேஸ் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளித்து விட முடியும்.

ஆரோக்கிய குறைபாட்டால் அடிக்கடி மருத்துவ மனைக்கு சென்றவர்கள், படுக்கையில் நீண்ட நாள் இருந்தவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கை காலில் அடிபட்டு வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் இருந்தவர்கள் பூரண குணமடைந்து லெளகீக இன்பங்களை அனுபவிக்கு வாய்ப்பு உருவாகும்.

வீட்டில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம்,மணி விழா போன்ற சுப நிகழ்விற்கான விரயங்கள் இருக்கும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். விசா தொடர்பான பிரச்சனைகள் சீராகும். மதப் பற்றால் மதம் தொடர்பான ஆசிரமங்கள், இயக்கங்களில் போய் சேர்ந்தவர்கள் மீண்டும் குடும்பம், குழந்தைகள் என வாழத் தொடங்குவார்கள்.துக்கம் குறைந்து படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

குருவின் 9ம் பார்வை தனம், வாக்கு. குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நெருக்கடிகள் விலகும் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். குடும்ப உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். பொருளாதர முன்னேற்றம் மகிழ்சிச்யை தரும். பல்வேறு விதமான யோக பலன்கள் வீடு தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். திருமணத் தடை அகலும்.விரும்பிய வரன் கிடைக்கும்.

பிள்ளைபேறு இன்மையால் அவதிப்பட்டவர்களின் இல்லத்தில் குழந்தை தவழும். பலருக்கு புதிய மொழியை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சை தொழிலாக கொண்ட ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் , கமிஷன் ஏஜென்ட்கள், ஜோதிடர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தேவைக்கு மிகுதியான உபரி வருமானம் கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்கள் சீராகும். ஒரு சில காரியங்கள் ஆரம்பத்தில் தடைபட்டாலும் முடிவில் நல்லவிதமாக உங்களுக்கு சாதகமாக முடியும்.அரசு வகை ஆதாயம் நிச்சயம் உண்டு. வயதான தாய் தந்தையர்கள் பிள்ளைகளால் நன்கு பராமரிக்கப்படுவார்கள்.

குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024- 13.6.2024 வரை)

தனுசு ராசிக்கு பாக்கியாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் எதிர்காலம் பற்றிய தைரியமும் தன்நம்பிக்கையும் அதிகரிக்கும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளுக்கு திருமணம் நடத்துவீர்கள். பேரன், பேத்தி, கொள்ளு பேரன் பேத்தி என பாக்கியம் தொடர்பான அனைத்து பலன்களும் நடக்கும்.

சிலர் வெளியூர், வெளிநாட்டில் செட்டிலாகலாம். புனித யாத்திரைகள் செல்வீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் உங்களை வழி நடத்தும்.ஒரு சிலருக்கு தந்தையின் பதவியை ஏற்று செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். உங்களின் குலம் தொடர்பான கோவில் பூஜைகள், திருவிழாக்கள்,குடும்ப சுப நிகழ்வுகளில் முதல் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.

குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை)

தனுசு ராசிக்கு அஷ்டமாதிபதியாகிய சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கடன் மற்றும் குடும்ப பிரச்சனைக்காக தலை மறைவானவர்கள் வீடு வந்து சேருவார்கள். ஏற்கனவே நடை பெற்றுக் கொண்டு இருக்கும் வழக்குகளின் விசாரணைகள் தள்ளிப்போகும் அல்லது வழக்குகள் உங்களுக்கு சாதகமாகாது.

பூர்வீகச் சொத்து தொடர்பான கோர்ட பிரச்சனைகள் மன வருத்தத்தை தரும் என்பதால் வழக்கை ஒத்திப்போடுவது உத்தமம்.சாமியை கும்பிட்டு பெரிதாக என்ன சாதித்தோம், சாமியே கிடையாது என்ற விரக்தி ஏற்படும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும்.

குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்(21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

தனுசு ராசிக்கு 5, 12ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உயர்குலத்தவராலும், உறவினர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும். மதப்பற்று மிகும். குழந்தைகளின் நலனில் ஆர்வம் உருவாகும். நல்ல துணிச்சலும், குரு பக்தியும் ஏற்படும். நிறைந்த வருமானம் இருக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும்.புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான சலுகைகள் கிடைப்பதில் இருந்ததடை தாமதங்கள் விலகும்.

குருவின் வக்ர காலம் (தனுசு ராசிக்கு 5,12-ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

வக்ரமடையும் காலத்தில் ஜனன கால ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் பலம் இழந்தவர்களுக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகும். இறையுடன் மனம் ஒன்றாது. ஒரு சிலர் மதம் மாறுவார்கள். பிள்ளைகளை சொந்த பொறுப்பில் கவனிப்பது நல்லது.

தனுசு ராசிக்கு அஷ்டமாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2 2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் புதிய முதலீடுகள், ஒப்பத்தங்களை தவிர்க்க வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

பரம்பரை நோய் தாக்கம் குறைந்து பூரண ஆரோக்யம் கிடைக்கும். அரச துரோகத்தால் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் குறைந்து விடுதலை கிடைக்கப் பெறுவார்கள்.

திருமணம்

இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும்.

மாணவர்கள்

4ல் உள்ள ராகுவால் பள்ளிக்கூடம் மாற்றலாம். கல்வியில் நாட்டம் குறையும். ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கும் உதவும். ஜாலியாக இருப்பதுடன் வரும் கல்வியாண்டில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த உங்களை தகுநிலைப்படுத்துவது மிக முக்கியம்.

பெண்கள்

பல வருடமாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும்.மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். கணவரும், புகுந்த வீட்டாரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

 பரிகாரம்

வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து வழிபடவும். பராமரிப்பு இல்லாத சிவாலயங்களின் பராமரிப்பு பணிக்கு உதவவும். தீபமேற்ற எண்ணெய் வாங்கித் தரவும்.

Similar News