என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தனுசு - குருப்பெயர்ச்சி பலன்கள்
தனுசு
குருப்பெயர்ச்சி பலன்கள் 2023
பேராற்றல் நிறைந்த தனுசு ராசியினரே இதுவரை ராசிக்கு நான்கில் நின்று கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுத்திய குருபகவான் பஞ்சம ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.
ஐந்தாமிட குருவின் பொது பலன்கள்:
ஐந்தாமிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம்.தனுசு ராசிக்கு ராசி மற்றும் நான்காம் அதிபதியாகிய குரு பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று தன, முயற்சி ஸ்தான அதிபதி சனியின் பார்வை பெறுவது சிறப்பான அமைப்பு. இது இழந்ததை மீண்டும் மீட்டுத்தரக் கூடிய கிரக அமைப்பு. இதுவரை நிலவி வந்த தடைகள், தடங்கல்கள் நீங்கி நல்லதொரு முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிறந்த குழந்தை முதல் வயோதிகர்கள் வரை அவரவர் வயதிற்கேற்ற சுப பலன்கள் நடந்து கொண்டே இருக்கும். பரிசுகள், பட்டங்கள், பதவிகள் கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன் மனைவி அன்பு பெருகும். தடைபட்ட பல விசயங்களுக்கு விடைகள் கிடைத்து அனுகூலமான மாற்றங்கள் பெற்று மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி கணிசமான லாபம் உயரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும்.பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடுவார்கள். பய உணர்வு நீங்கி வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். தடைபட்ட பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினை பேச்சு வார்த்தையில் சுமூகமாகி உங்களை நாடி வரும். நிலையான தொழிலோ, உத்தியோகமோ இன்றி அவதியுற்றவர்களுக்கு மனதிற்கு பிடித்த தொழில் அல்லது உத்தியோகம் அமையும். குல தெய்வ அனுகிரகம் ஏற்படும். குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றி அறியும் காலம் வந்து விட்டது.
குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:
தனுசு ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை பதிவதால் மனதில் நிலவிய பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். பலகாலமாக முடிக்க முடியாமல் தீர்க்க முடியாமல் கிடந்த குடும்ப பிரச்சனைகளுக்கு நல்ல விடை கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மனதில் உங்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் மறைத்து நல்ல சிந்தனை உண்டாகும்.கோவில் பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆலயத் திருப்பணிக்கு உதவி செய்வீர்கள். ஆன்மீகப் பெரியோர்கள், மகான்கள், குருமார்கள், இவர்களை தரிசிக்க கூடிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சிலருக்கு குருவின் உபதேசங்கள், தீட்சைகள் கிடைக்கும். நல்ல ஜோதிடர், நல்ல மருத்துவர், நல்ல குருமார்களின் அறிமுகம் கிடைக்கும்.புதிய கலைகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை மகன் அன்பு பெருகும். பல கோயில் குளம் ஏறி இறங்கிய பலனால் புத்திர பேறு கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து பார்க்கும் பாக்கியம் உண்டாகும்.
குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:
ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்திற்கு குருவின் ஏழாம் பார்வை பதிவதால் தொழிலில் நிலவிய தடைகள் விலகி புத்துயிர் பெறும். வியாபாரம், உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். பணிச் சுமை குறையும்.பொருளதார முன்னேற்றம் ஏற்படும். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். பொன், பொருள் வாங்குவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும். அடகு நகைகள் மற்றும் சொத்துக்களை மீட்பீர்கள். வீடு, மனை, நிலங்கள், .அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்குவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் வாழ்வில் சுப பலன்கள் உண்டாகும். மூத்த உடன் பிறப்புகள் சித்தப்பாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சொகுசு வாழ்க்கையை நோக்கி முன்னேறுவார்கள்.
குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:
ராசியில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் மனதில் தெளிவு, தன்னம்பிக்கை பிறக்கும். உடல் தேஜஸ் பெறும். பல புதிய மாற்றங்கள் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.மனதில் இருந்த கவலைகள், கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். உங்களுடைய திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும் காலம். பட்ட கஷ்டத்திற்கு பயனடையும் காலம் என்று சொல்லலாம். பரந்த மனப்பான்மை தாராள குணம் ஏற்படும்.தந்தை, தந்தை வழி முன்னோர்களின் ஆசியும், ஆஸ்தியும் கிடைக்கும். சிலர் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். நீங்கள் பட்ட அனைத்து கஷ்டத்திற்கும் நிவர்த்தியாக தற்போது பலனடையப் போகிறீர்கள்.
அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்
22.4.2023 முதல் 21.6.2023 வரை
கோட்சாரத்தில் ராசிக்கு 11ல் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் பலிக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் சொல் கேட்பார்கள். புதிய தொழில் கிளைகள் திறக்கலாம். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் சொகுசு பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை
தனுசு ராசிக்கு 6, 11ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அரசு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. IAS, IPS, IFS பணிக்கு தேர்வு எழுதுபவர்களுக்கு பணி நியமனம் உண்டு. விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும். பிள்ளைகளின் சுப காரியத்திற்கு எதிர்பார்த்த தொகை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். விரயங்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களாலும், சமூதாய அந்த ஸ்தான மனிதர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை
தனுசு ராசிக்கு பாக்கியாதிபதியான சூரியனின்கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கவுரவம் அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை நிலவி வந்த தடைகள் அனைத்தும் விலகும். அரியர்ஸ் பாடத்தை எளிதி முடிப்பீர்கள். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். மதப்பற்று மிகும். பல தலைமுறையாக விற்காத பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். 4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் வயதானவர்களுக்கு வெளிநாட்டி லிருக்கும் பேரன் பேத்திகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.
பெண்கள்: பெண்களுக்கு இது சூப்பரான குருப்பெயர்ச்சி. நேரம் காலம் நன்றாக இருக்கும் பொழுது கிடைக்கும் சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தவேண்டும். உபரி வருமானத்தை சேமித்து நகை,வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய் வழி சொத்து கிடைக்கலாம்.உடல் பெருக்கம் ஏற்படும். உணவு கட்டுப்பாடு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களின் தகுதிக்கு தகுந்த உயர்வு உண்டு.
மாணவர்கள்: அக்டோபர் 30,2023ல் ராகு 4ம்மிடம் செல்வதால் குழந்தைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவ / மாணவிகள் மனனம் செய்யாமல் நன்றாக புரிந்து படித்தால் நீங்கள் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். கணிதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முயற்சி செய்யும் மாணவிகள் முதல் மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.
உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.நல்ல பண வரவு சுப விரயம் ஆகிய நன்மைகள் மிகும்.
ராகு/கேது பெயர்ச்சி: அக்டோபர் 30,2023ல் ராகு நான்காம் இடத்திற்கும் கேது பத்தாமிடமும் செல்கிறார். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது பழமொழி. பத்தாமிட கேது தொழில், உத்தியோகத்தில் தனித்திறமையுடன் மிளிரச் செய்வார். உங்களுடைய தொழில் சார்ந்த உப தொழில் ஒன்று துவங்கும் வாய்ப்புள்ளது.
பரிகாரம்: விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள் அருள் உங்கள் பக்கம் இருக்கும். நல்லது நினைக்க நல்லதே நடக்கும். வியாழக்கிழமை சித்தர்களின் ஜீவ சமாதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட அருமையான சுப பலன்கள் உண்டாகும். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் மஞ்சள், சந்தனம் அபிசேகம் செய்து மஞ்சள் லட்டு படைத்து குரு பகவானை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023
குருபக்தி மிகுந்த தனுசு ராசியினரே ராசிக்கு 4ல் குரு பகவான் ஆட்சி பலம் பெறுகிறார்.
சனிபகவான் 2 ,3ம் இடத்திலும் ராகு பகவான் 5ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும் பயணிக்கிறார்கள். இதுவரை ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்த ராசி அதிபதி குருபகவான் 4ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தனுசு ராசிக்குகுரு பகவான் ராசி அதிபதி மற்றும் சுகாதிபதி. இந்த குருப் பெயர்ச்சி இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுத் தருவதாக இருக்கும். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த முயற்சிகள் வெற்றி கிடைக்கும் . குழப்பங்கள் தீரும்.
மனக் கலக்கங்கள் காரிய தாமதம் அகலும். இழந்த பதவிகள் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு, பணமுடக்கங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.பிரச்சனைகளை பொறுமையாக சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.எந்த காரியத்தை யாரிடம் பேசி எப்படிசாதிக்க வேண்டும் என்ற திறமை வளரும். மற்றவரின் உதவியை விரும்பாமல்உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தை நீங்களே முயன்று அடையும் பக்குவம் பெறுவீர்கள்.கிடைக்கும்நேரத்தையும் , சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பேராசை குறையும்.புத்திசாலித்தனமும், தைரியமும் அதிகரிக்கும். நல்ல தோற்றப் பொழிவும், ஜன வசீகரமும் ஏற்படும். சாஸ்த்திர ஞானமும் வியாபார தந்திரமும் உயரும். உயர்ந்த லட்சியம் உங்களை ஆட்கொள்ளும்.
1,4ம் அதிபதியாகிய குரு 4ல் கேந்திரம் ஏறி அர்தாஷ்டம குருவாகிறார். குரு உங்களுக்குகேந்திராதிபதி என்றாலும்பெரிய பாதகங்கள் எதுவும்நிகழாது. தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வையும்4ம் இடத்திற்கு இருப்பதால் தங்கள் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் நல்ல மாற்றம்தோன்றும். குழப்பமான மனநிலை, சோர்வு, மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் அடைய முயல்வீர்கள். வீடு அல்லது தொழில் ஸ்தாபனத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.
உங்களின் 4ம் அதிபதி குரு என்பதால்நீங்கள் வாங்கும் வீடு, மனை அருகில் ஆன்மீக ஸ்தலங்கள் இருக்கும்வாய்ப்புப்புள்ளது.முறையான ஆவணங்கள், பட்டா இல்லாத சொத்து போன்ற வற்றிற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும். இடதோஷம் உள்ள மனை அல்லது பூமியின் அதிர்வலையில் குறைபாடு உள்ள சொத்தில் வாஸ்து குறைபாடு சரி செய்யப்படும். தாயின் ஆரோக்யத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாயார் அல்லது தாய் வழி சுற்றத்தினரால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழிச் சொத்தில் உள்ள சட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். கால்நடைபாக்கியங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். 4ல் குரு உள்ளதால் மாணவ மாணவிகள் கடினமாக உழைத்தால் நல்ல மதிப்பெண் எடுப்பது நிச்சயம். 4ம் இடத்திற்கு சனிப் பார்வையும் இருப்பதால் பள்ளிப் படிப்பைபாதியில் நிறுத்திய மாணவர்கள் கூட மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பார்கள்.
5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வையும், சனியின் 7ம் பார்வையும் அஷ்டம ஸ்தானத்திற்கு இருப்பதால் ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். உடலும் மனமும் புத்துணர்வு பெறும். இந்தகுருப் பெயர்ச்சி நோயிலிருந்து உங்களை காக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆயுளுக்கு பங்கம் விளைவிக்க கூடிய கொடிய நோய்க்கு சிகிச்சை செய்பவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தீராத கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றிலிருந்து சிறு நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாதசட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தால்அலைக்கழிகப்பட்டுமன வேதனை அடைந்தவர்களுக்கு வழக்கு வியாஜியங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிரஷ்டம், உயில், காப்பீட்டு முதிர்வு தொகை போன்றவற்றின் மூலம் தன லாபங்கள் ஏற்படும்.
கோட்சாரத்தில் 5ல் ராகு இருப்பதால் குழந்தை பாக்கியத்தில் தடைதாமதம்ஏற்படலாம். செயற்கை முறை கருத்தரிப்பிற்குமுயற்சி செய்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை சரிபார்ப்பது அவசியம். 17. 1.2023 க்கு பிறகு சனிபகவானின் 3ம் பார்வையும் 5ம் இடத்திற்கு இருப்பதால் உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். குழந்தைகள் மூலம் குடும்பத்தில் தொல்லைகள் குழந்தைகளுக்காக கடன் படுதல் அல்லது குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைபாடு போன்ற சச்சரவு ஏற்படலாம்.
7ம் பார்வை பலன்கள்:அரசியல், ஆன்மிகம், கல்வி, சொந்த தொழில் போன்ற எந்த துறையாக இருந்தாலும் அதில் நிலவிய மந்த நிலை மாறி தொழில் சூடு பிடிக்கும். உழைத்த உழைப்பிற்கு நிறைந்த வாபம் உண்டு. தொழில் மூலம் மரியாதை கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும் .வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உங்களின் 10ம் அதிபதி புதன் என்பதால் கமிஷன் தொடர்பான தொழிலில்இருப்பவர்களுக்கு முன்னேற்றம்நன்றாக இருக்கும். இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்கு பெருகும். 5ல் ராகு இருப்பதால் சிலர் புதிய வழி, குறுக்குவழி தொழில தந்திரங்களைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் குல தெய்வ கோவில் வழிபாட்டில் இருந்ததடை, தாமதங்கள் விலகும். விட்டுப் போன வழிபாடுகள், பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். சிலர் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக வெளி நாட்டிற்குச் செல்லலாம். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது. போதிய வருமானம் இருந்தாலும்இழப்புகள், விரயத்தை தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கும். செலவுகளை குறைந்துக் கொள்வது நலம். கவனமாக தொழில் நடத்த வேண்டிய காலம்.தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. சுய தொழில் செய்பவர்களுக்குபொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நிம்மதியான தூக்கம் வரும்.
குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில்வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் நிற்பதால் கடினமான மற்றும் அடுத்தவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்பு தோன்றி மறையும். ஆரம்பக்கல்வி பயிலும் குழந்தைகளுக்குகல்வியில் சிறு தடை அல்லது மந்த நிலை இருக்கும். குரு உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் போது 5ல் உள்ள ராகு எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது இந்த கால கட்டத்தில் நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். அவசர தேவைக்கு நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தற்போதைய நிதி நிலையை சரி செய்ய முடியும். குருவின் வக்ர நிவர்த்திக்கு பிறகு சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு கடனால் கவலை உண்டாகும்.
பெண்கள்: திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறுஊர்களில் பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை காலை 11-12 மணி வரையான சனி ஒரையில் முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து பட வேண்டும்.சனிக் கிழமை காலை 8-&-9 மணி வரையான செவ்வாய் ஒரையில் சிவனுக்குநல்லெண்ணெயில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தொடர் மழை: தாமிரபரணி கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
பென்டகனை மிஞ்சிய பிரமாண்டம்: சூரத் வைர பங்குச்சந்தையை டிச. 17ல் திறந்து வைக்கிறார் பிரதமர்
கர்னி சேனா அமைப்பு தலைவர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது
நிவாரண பொருட்களை திருடும் ஹமாஸ் அமைப்பினர்: இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஷீத்தலுடன் காதல் முறிவு- பப்லு விளக்கம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
