15.4.2024 முதல் 21.4.2024 வரை
அனுகூலமான வாரம். ராசிக்கு குரு மற்றும் உச்ச சூரியனின் பார்வை. ஆன்ம பலம் பெருகும்.நம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் துலாம் ராசியினரின் காட்டில் இன்ப மழைதான். மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். ஒரு சிலர் வேலை மாற்றம் செய்வார்கள் அல்லது வேலையிலிருந்து தொழிலுக்கு மாறுவார்கள். தொழில் உத்தியோகத்தில் வேலைப் பளு மிகுதியாக இருக்கும்.
உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்ரன் 6ல் ராகுவுடன் இருப்பதால் அரசு, தனியார் துறையில் இருப்பவர்கள் வேலையில் விழிப்புடன் இருக்க வேண்டும் ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு, பாஸ் புக், ஆர்.சி. புக் போன்ற ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும்.
6-ம்மிட ராகுவால் ஏற்படும் உடல் நிலையை சீராக்க உணவு கட்டுப்பாடு தேவை. குருவும், சூரியனும் முழுவலுவுடன் இருப்பதால் திருமணத் தடை அகலும். முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஸ்திர சொத்துக்கள் சேரும்.குருவின் பார்வை படும் இடங்கள் சாதகமாக இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும். எனினும் மன அமைதியையும், ஆனந்தத்தையும் அதிகரிக்க தினமும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பதும், படிப்பதும் இன்னல்களை நீக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406