என் மலர்tooltip icon

    துலாம் - வார பலன்கள்

    துலாம்

    வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை

    22.6.2025 முதல் 28.6.2025 வரை

    நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும் வாரம். ராசிக்கு குரு மற்றும் சுக்ரன் பார்வை உள்ளது. இதுவரை இருந்த பயம் அகலும்.வேலையில் நல்ல சம்பளத்துடன் கூடிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம் வேலையில் கடினமாக உழைக்க நேரும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

    தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த உகந்த காலம். வராக்கடன்கள் வசூலாகும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணைவார்கள். பெரிய பொருள் உதவிகள் கிடைக்கும். சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு மாறு வார்கள். புதிய சொத்துக்கள் சேரும். புத்திர பிராப் தம் கிட்டும்.

    22.6.2025 அன்று இரவு 11.03 முதல் 24.6.2025 இரவு 11.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர் காலத்திற்கு திட்டமிட்டு படிப்பது அவசியம். பிரதோஷத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்வது சிறப்பான முன்னேற்றத்தை தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை

    15.6.2025 முதல் 21.6.2025 வரை

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன் வீட்டை தானே பார்க்கிறார். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும். தடைபட்ட சம்பள உயர்வும், உத்தியோக உயர்வும் இந்த வாரத்தில் கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் மொத்தமாக கிடைக்கும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது.

    உடன் பிறந்த சகோதரர்களால், நண்பர்களின் உதவிகள் பக்கபலமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதோடு உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். மருத்துவச் செலவுகள் குறையும். தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். மாற்றுமுறை மருத்துவத்தில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

    திருமணத் தடை அகலும். மாமனார் மூலம் பெரிய பணம், அதிர்ஷ்ட சொத்துக்கள் கிடைக்கும். தொலைந்து போன, திருடு போன கைமறதியாக வைத்த பொருள் கிடைக்கும். தினமும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 08.06.2025 முதல் 14.06.2025 வரை

    08.06.2025 முதல் 14.06.2025 வரை

    வெற்றிமேல் வெற்றி வந்து சேரும் வாரம். ராசிக்கு சுக்ரன் மற்றும் குரு பார்வை. சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும். இதுவரை தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சித்திக்கும். சுயமாக சிந்தித்து செயல்படுவீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளை நம்பி பிழைத்த நிலை மாறும். சிலர் தனித் திறமையால் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் அதிகம் சம்பாதித்து பிரபல மடைவார்கள்.

    உழைத்து சம்பாதித்த ஊதியம் பயன்படாத நிலை மறையும். நல்ல வேலை வாய்ப்புகள் தேடிவரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் பழைய கடன்களை அடைக்கக் தேவையான வருமானம் கிடைக்கும்.

    விரும்பிய இடப்பெயர்ச்சி கிடைக்கும். உயில் எழுத உகந்த காலம். தடைபட்ட பத்திர பதிவு தற்போது நடந்து முடியும். பாகப்பிரிவினை பேச்சு வார்த்தைகள் சுமூகமாகும். அரசியல் பிரமுகர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு புதியதாக எதிர்பாலின நட்பு கிடைக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். நவகிரக சுக்கிரனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 01.06.2025 முதல் 07.06.2025 வரை

    01.06.2025 முதல் 07.06.2025 வரை

    தர்மம் தலைகாக்கும் நேரம். ராசிக்கு சுக்ரன், குரு, செவ்வாய் பார்வை. உங்கள் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். செய்தொழில் விருத்தியாகும். புதுபுது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உகந்த நேரம்.

    அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில், உத்தியோகம் தொடர்பான அனைத்து சூழ்நிலையும் சாதகமாக அமையும். தொழில் அபி விருத்தி மூலம் வளர்ச்சி உண்டாகும். தொழில் போட்டிகள் நீங்கும். கடன் தொல்லை குறைந்து சேமிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கொடுத்த தொகை விரைவில் வசூலாகும்.

    சிலர் பழைய கடனை அடைத்து விட்டு புதிய கடன் வாங்குவார்கள். சிலர் பூர்வீகச் சொத்தின் மூலம் கடன் பெறலாம்.

    சிலர் புதிய வீடு அல்லது வாகனம் வாங்க அட்வான்ஸ் தொகை செலுத்துவீர்கள். பெண்களுக்கு வேலைப்பளு குறையும். பணம் கொடுத்து அரசு வேலைக்கு முயற்சிக்க வேண்டாம். இந்த வாரத்தில் சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். ஸ்ரீ விஜய லட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை

    25.05.2025 முதல் 31.05.2025 வரை

    சந்தோசமான வாரம். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் பங்கு வர்த்தர்களின் வருமானம் கணிசமாக உயரும். திடீர் அதிர்ஷ்டத்திற்கு வாய்ப்புள்ளது. வாலிப வயதினரின் திருமணக் கனவுகள் நனவாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு காதல் திருமணம் கைகூடும். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும்.

    வாழ்க்கைத் துணை மூலம் மதிப்பு அதிகமான சொத்து, பணம், நகைகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. சொத்துக்கள் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். தாய்மாமனுடன் ஏற்பட்ட மன பேதம் மறையும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் உள்ளம் குளிரும். வியாபாரிகளின் உழைப்பு அதிக வருமானத்தை பெற்றுத்தரும்.

    தொழிலாளிகளால் போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகும். 26.5.2025 அன்று மதியம் 1.40 மணி முதல் 28.5.2025 பகல் 1.36 மண வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.பிரயாணங்களை ஒத்தி வைக்கவும். செயலில் தடுமாற்றம், சிந்தனையில் குழப்பம் ஏற்படலாம். அமாவாசையன்று வெள்ளை மொச்சை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 18.05.2025 முதல் 24.05.2025 வரை

    18.05.2025 முதல் 24.05.2025 வரை

    புதிய சொத்துக்கள் சேரும் காலம். ராசிக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை. கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட இன்னல்கள் குறையும். இது துலாம் ராசிக்கு இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிக் கொடுக்கும் காலம் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. அடுத்த பத்து மாதத்திற்கு உங்கள் காட்டில் அடை மழை தான்.

    செவ்வாய் கடக ராசியை கடக்கும் முன்பு உங்கள் வாழ் நாளுக்கு தேவையான சொத்து சுகத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. கால்நடை வளர்ப்பவர்கள், பண்ணையாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகும். புதிய பண்ணை நிலம், காலி மனைகள் வாங்கி பிற்காலத்திற்கு சேமிக்க உகந்த காலம். வியாபாரிகளுக்கு முதலீடு இரட்டிப்பு பலன் தரும்.

    தாய் வழியில் வரவேண்டிய சொத்தை நினைத்து மனதை வருத்தி உடல் ஆரோக்கியத்தை கெடுக்க கூடாது. உடல் நோய்க்கு மருந்துண்டு. மனநோய்க்கு காலம் தான் மருந்து. 3ம் இடத்திற்கு குரு பார்வையுடன் சனி பார்வையும் இருப்பதால் உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு, சிறிய மனசஞ்சலம் மற்றும் வாக்குவாதத்திற்கு பிறகே தாய்வழி சொத்து வந்து சேரும். ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை

    11.5.2025 முதல் 17.5.2025 வரை

    நல்ல முன்னேற்றம் உண்டாகும் வாரம். பாக்கிய ஸ்தானத்திற்கு குரு பகவான் செல்வதால் ராசியில் குரு பார்வை பதிகிறது. ஆன்மீக நாட்டம் அதிகமாகும். சுயஜாதகரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். தைரியம் மிகுதியாக இருக்கும். மனபலம், நிம்மதி கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களையும் குரு பகவான் பெற்றுத் தருவார்.

    வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் உடனே ஈடுபடலாம். திருமணம் தொடர்பான பாவகங்கள் மிக வலிமையாக இயங்குவதால் திருமணத் தடை அகலும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிப்பார்கள்.

    உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல் வாய்ப்பு உண்டாகும். பேரன், பேத்தி யோகம் கிடைக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுர வப்படுத்தும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். சித்ரா பவுர்ணமி அன்று மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 4.5.2025 முதல் 10.5.2025 வரை

    4.5.2025 முதல் 10.5.2025 வரை

    செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு சூரியன், புதன் பார்வை. கவலைகள், கஷ்டங்களை விரட்டி அடிக்கும் விதமான சந்தர்ப்பம் அமையும். தடைபட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் மங்களகரமான நிகழ்ச்சியால் மன நிம்மதியும் உண்டாகும். சுக்ரன் உச்ச நிலையில் இருப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். திருமணத் தடைகள் அகலும்.

    பொருளாதார மாற்றதால், மேன்மையை அடைவீர்கள். எதிர்பார்த்த அரசு சலுகைகள், உதவிகள் கிடைக்கும். பல புதிய தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முன்னேற்றமான பலன்கள் நடைபெறும். மாணவர்கள் சாமர்த்தியமும் அறிவுத் திறமையும் தேர்வில் வெளிப்படும். கணவன், மனைவி பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். கோடை விடுமுறையை இன்பத்துடன் கழிக்க சுற்றுலா செல்வதற்கான முன் ஏற்பாடுகள் நடக்கும். ஸ்ரீ வராகி அம்மனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை

    27.4.2025 முதல் 03.5.2025 வரை

    மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு சூரியன், செவ்வாயின் பார்வை இருப்பதால் நினைத்தவற்றை உங்கள் முயற்சியால் சாதிப்பீர்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் கவுரவமான நிலை இருக்கும். அரசு வகை ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையை நிரூபிக்க நல்ல சந்தர்ப்பங்கள் தானாக கூடி வரும்.

    மனைவி வழி சொத்தில் நிலவிய கருத்து வேறுபாடு, பகைமை மறைந்து முழு பங்கும் கிடைக்கும். விவசாயிகளின் தேவைக்கு கடன் கிடைக்கும். நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். புதிய சொத்து வாங்குபவர்கள் பட்டாவை சரிபார்க்க வேண்டும். பெற்றவர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் திருமணம் நடக்கும்.

    அழகிய, ஆடம்பர விலையுயர்ந்த வெளிநாட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். 29.4.2025 அன்று அதிகாலை 2.53 மணி முதல் 1.5.2025 அன்று அதிகாலை 3.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். தொழிலில் நிலையற்ற தன்மை, நெருக்கடிகள் ஏற்படலாம். மன சஞ்சலம் உருவாகலாம். தாய்மாமாவுடன் சிறு மனபேதம் உண்டாகும். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு லாப அதிபதி உச்ச சூரியன் பார்வை இருப்பதால் மனபலம், தைரியம் வெற்றியைத் தரும். வீரதீரச் செயல்களால் புகழ் பெறுவீர்கள். அடிப்படை தேவைக்கு திணறியவர்களுக்கு சரளமான பணப்புழக்கம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் கதவை தட்டும். வியாபாரம் பெருகும். இதுவரை கல்யாணம் நடக்குமா என்று ஏங்கிக் கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வரன் அமையும்.

    அண்டை, அயலாருடன், பக்கத்து நிலத்தினருடன் நிலவிய எல்லைத் தகராறு சட்டத்தின் உதவியை நாடவைக்கும். தகவல் தொடர்பு துறையினர், ஆன்லைன் வர்க்கத்தினரின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலும் வருமானமும் அதிகரிக்கும்.

    ரியல் எஸ்டேட் துறையினருக்கு, கட்டுமான துறையினர், கட்டுமானப் பொருட்கள் விற்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நிதானமாக சிந்தித்து வேரறுப்பீர்கள். ஏற்ற இறக்கங்களை சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள். பெண்களின் திறமைகள் பாராட்டப்படும்.லலிதா பரமேஸ்வரியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 13.4.2025 முதல் 19.4.2025 வரை

    13.4.2025 முதல் 19.4.2025 வரை

    நன்மையும் தீமையும் கலந்த வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சம் பெறுவதால் குடும்ப உறவுகளால் வீண் விரயத்தை சந்திக்க நேரும் அல்லது கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரும். அலைச்சல் மிகுந்த பயணங்களும் சுப விரயங்களும் ஏற்படும். வெளிநாடு சென்ற சிலர் வேலை பிடிக்காமல் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார்கள். சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    சிலர் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் வஞ்சிக்கப்படுவார்கள். பண விவகாரங்கள் கவலை தரும். பொறுமையோடு இருப்பது நல்லது. இரண்டாம் திருமண முயற்சி சாதகமான பலன் தரும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். கண் திருஷ்டி உண்டாகும். பூமி, மனைகள் வாங்குவதில் நிலவிய தடைகள் அகலும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குல, இஷ்ட தெய்வ வழிபாட்டுடன் இந்த வாரத்தை கடக்க முயலவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 06.4.2025 முதல் 12.4.2025 வரை

    06.4.2025 முதல் 12.4.2025 வரை

    எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரம். ராசிக்கு 6ல் 5 கிரகச் சேர்க்கை. ருண, ரோக சத்ரு ஸ்தானம் பலம் பெறுகிறது. மறைவு ஸ்தானங்கள் வலிமையாக இயங்குகிறது. கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை உண்டாகலாம். நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் ஏற்படும். அல்லது வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நண்பர்களும் பகைவர்களாக மாறும் காலமாதலால் யாரிடமும் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. போட்டி பந்தயங்களில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.

    தேவையற்ற வம்பு, வழக்குகள் வாசல் கதவை தட்டும். வாய்ப்புகள் தடைபடும். சிலர் பணியில் ஏற்பட்ட வீண் பழியால் வேலையில் இருந்து விலகலாம். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால் தான் பலனை அடைய முடியும். தந்தையின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். கடன் தொல்லை, இழப்புகள், விரயங்கள் வந்து சேரும். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை குறையும். சிலர் உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறலாம்.வரவும், செலவும் சமன்படும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×