என் மலர்
துலாம் - வார பலன்கள்
துலாம்
வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை
5.10.2025 முதல் 11.10.2025 வரை
அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெறபோகிறார். இது துலாம் ராசியினருக்கு சகல ஐஸ்வர்யங்கள் சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும் அமைப்பாகும். துலாம் ராசியினருக்கு தீபாவளி விற்பனை நல்ல லாபம் பெற்று தரும்.
தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் உயர்வாக இருக்கும். போட்டி, பொறாமைகள் அகலும். நண்பருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த ஜாமீன் தொகை வந்து சேரும். விவாகரத்து வழக்கு தீர்ப்பு தள்ளிப்போகும். 4ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சொத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரிபார்த்து விட்டு புதிய சொத்து வாங்க முன்பணம் கொடுக்கவும்.
உடல்நிலையில் பாதிப்புகள் குறையும். 10.10.2025 அன்று 1.23 காலை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்களை தவிர்க்கவும். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்பதால் அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை
28.9.2025 முதல் 4.10.2025 வரை
சுதிர சொத்துக்கள் சேரும் வாரம். ராசியில் உள்ள செவ்வாயை குரு பகவான் பார்க்கிறார். இது குரு மங்கள யோகமாகும். இதுவரை சொத்துக்கள் இல்லாதவர்களுக்கும் சொத்து சேரும். சிலருக்கு அரசாங்கத்தின் மூலம் இலவச வீடு மனைகள் கிடைக்கலாம். விற்க முடியாமல் கிடந்த பழைய குடும்ப சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்கலாம்.
புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் நீங்கி கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து மருமகன், மருமகள் வரக் கூடிய அமைப்பு உள்ளது. கலைத் துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் எற்பட்ட கருத்துவேறுபாடு குறையும்.
ஆன்மீக நாட்டம் உண்டாகும். பணம் பல வழிகளில் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். திட்டமிட்டு செயலாற்றினால் காரிய வெற்றி உண்டாகும். இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உண்டாகும். புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் கர்ம வினை தாக்கம் குறையும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 21.9.2025 முதல் 27.9.2025 வரை
21.9.2025 முதல் 27.9.2025 வரை
எதிர்ப்புகள் அகலும் வாரம். ராசியில் தனாதிபதி செவ்வாய் குருவின் பார்வையில் சஞ்சரிக்கிறார். பணம் குடும்பம் பற்றிய எண்ண ஓட்டங்கள் அதிகரிக்கும். பொருள் சார்ந்த விஷயங்களில் கவனம் கூடும். விரும்பிய இலக்கை அடைய திட்டமிடுவீர்கள். உங்களை சூழ்ந்து நின்ற வெறுமை எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகள் குறையும். வருமானம் உயரும்.
பூர்வீகச் சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் வெற்றி பெறும். அன்புடன் பேசினால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். அற்புதமான இந்த காலகட்டங்களில் உங்கள் கோபத்தை குறைத்துக் கொண்டால் வெகு விரைவில் வெற்றி கனியை எட்டிப் பறிப்பீர்கள். துலாம் ராசிக்கு திருமண தடைகள் விலகி நல்ல பலன்கள் வந்து சேரும்.
மன அழுத்தத்தால் ஏற்பட்ட தூக்கமின்மை கோளாறு சீராகும். புதிய எதிர்பாலின நட்புகள் உருவாகும். புகுந்த வீட்டு உறவுகளால் ஏற்பட்ட சர்ச்சைகள் முடிவிற்கு வரும். நவராத்திரி காலங்களில் சக்தி வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவதால் வருமானம் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
புதிய வளர்ச்சிக்கான பாதை தென்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். இன்சூரன்ஸ், சீட்டு பணம், பங்குச் சந்தை, தொழில் ஆதாயம் என பல வகைகளில் வருமானம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் ஒத்திப் போகும். சகோதர, பங்காளி கருத்து வேறுபாடு நீங்கும்.
உறவுகளின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் கூடும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். திருமணத் தடைகள் அகலும். மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு சொந்த தொழில் செய்யும் எண்ணம் உதயமாகும்.
14.9.2025 அன்று இரவு 8.03க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. மகாளய பட்ச காலங்களில் சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருள்கள் வழங்கி நல்லாசி பெற பெண் சாபங்கள் விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை
7.9.2025 முதல் 13.9.2025 வரை
ஆரவாரம் மிகுந்த வாரம். ராசிக்கு குருப் பார்வை உள்ளது. நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். எடுக்கும் புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். பங்குச்சந்தை லாபம் மற்றும் உழைக்காத வருமானம் அதிகரிக்கும்.
பிள்ளைகளுக்கு வேலை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும். ஆரோக்கியம் முன்னேற்றம் தரும்.
ராசிக்கு 5ல் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். 12.9.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பமாகிறது. வெளியூர்ப் பயணங்கள் அலைச்சலில் முடியும்.தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படித்து அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை
31.8.2025 முதல் 6.9.2025 வரை
தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்ச ரிக்கிறார். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உயரிய கவுரவத்தை அடையும் நேரம்.நடக்குமா என்ற நிலையில் இருந்த காரியத்தை மன உறுதியுடன் தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.
சிலருக்குப் புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். புதிய தொழில் நண்பர்கள் சேர்க்கை, தொழில் லாபம் ஆகியவை ஏற்படும். அரசியல் அரசு சார்ந்த தொழில், அரசுப் பணியாளர்களுக்கு பண மழை பொழியும். வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள்.புத்திர பாக்கியம். வீடு வாகன யோகம் என சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்து கொள்வார்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பெண்கள் யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்க கூடாது. பிரதோஷ நாட்களில் சந்தனம் அபிஷேகம் செய்து வழிபடுவதால் மனஅமைதி கூடும். பொருளாதார மேன்மை உண்டாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை
மேன்மையான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் புதனுடன் சேர்க்கை பெறுகிறார். இது மதன கோபால யோமாகும்.இது உங்கள் தோற்றத்தால் பிறரை ஈர்க்கும் சக்தியை கொடுக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும். பெண்கள் ஆவணி மாத வளர்பிறை கால கட்டத்தில் மாங்கல்யம் மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை செய்யலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.லாப கேதுவின் காலம் என்பதால் விநாயகர் வழிபாடு சிறப்பான பலன் தரும்.
துலாம்
வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை
17.8.2025 முதல் 23.8.2025 வரை
சகாயங்கள் நிறைந்த வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். தடைபட்ட பாக்கிய பலன்கள் சித்திக்கும். மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். தொழில் விரிவாக்க கடனும் கிடைக்கும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும்.
நல்ல வருமானம் வரும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.
ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 18.8.2025 அன்று மதியம் 2.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும். காதலர்கள் இடையே சிறிய தவறுகள் பெரும் கருத்து வேறுபாடுகளாக மாறும். ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை
10.8.2025 முதல் 16.8.2025 வரை
திருப்பு முனையான வாரம். கோட்சார குரு மிகச் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சேமிப்புகள் கூடும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணத் தடை அகலும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். பெண்களுக்கு இது மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் தரக் கூடிய காலமாகும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
16.8.2025 அன்று காலை 11.43 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, முறையற்ற ஆவணங்களால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை
3.8.2025 முதல் 9.8.2025 வரை
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். மனஉறுதி, தைரியம், நேர்மறை எண்ணம், உதவி செய்யும் மனப்பான்மை கூடும். கடமைகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். ஆயுள் ஆரோக்கியம் கூடும். மருத்துவ செலவுகள் குறையும்.
கௌரவ பதவிகள் உறுதியாகும். பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். பேரன்,பேத்தி யோகம் கிடைக்கும். பாகப்பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும்.
ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். வரலட்சுமி நோன்பு நாளில் மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை
27.7.2025 முதல் 2.8.2025 வரை
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குருபகவானுடன் சஞ்சரிக்கிறார். நல்ல ஆன்மீக குரு கிடைக்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும்.தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும். இழுபறியாக கிடந்த அனைத்து விசயங்களும் சாதகமாகும். சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்கும்.
நல்ல தொழில் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். சிலருக்கு வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.
புத்திர விருத்தி உண்டு. திறமை மிக்க செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நல்ல உணவு, விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கைத் துணையுடன் நிலவிய பனிப் போர்மறையும். விவகாரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். கருட பஞ்சமி அன்று கருட தண்டகம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை
20.7.2025 முதல் 26.7.2025 வரை
தனவரவில் தன் நிறைவு உண்டாகும் வாரம். ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. செயல் திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும். தொழிலில் நிலவிய மந்த நிலைகள் மாறி சூடு பிடிக்கும். லாபமும் அதிகரிக்கும். தாய், தந்தை உங்களை புரிந்து கொண்டு உதவுவார்கள். கடன் தொல்லை குறையும். மனம் நிம்மதியாக இருக்கும்.
குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். தம்பதிகளிடம் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். திருமண முயற்சி கைகூடும். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். 20.7.2025 அன்று காலை 6.12 மணி முதல் 22.7.2025 அன்று காலை 8.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.
வேலை பார்க்கும் இடத்தில் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு விலகும். ஆடி வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






