என் மலர்tooltip icon

    துலாம் - வார பலன்கள்

    துலாம்

    வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை

    7.9.2025 முதல் 13.9.2025 வரை

    ஆரவாரம் மிகுந்த வாரம். ராசிக்கு குருப் பார்வை உள்ளது. நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். எடுக்கும் புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். பங்குச்சந்தை லாபம் மற்றும் உழைக்காத வருமானம் அதிகரிக்கும்.

    பிள்ளைகளுக்கு வேலை, திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெறும். ஆரோக்கியம் முன்னேற்றம் தரும்.

    ராசிக்கு 5ல் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். 12.9.2025 அன்று மாலை 5.30 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பமாகிறது. வெளியூர்ப் பயணங்கள் அலைச்சலில் முடியும்.தினமும் மகாலட்சுமி அஷ்டகம் படித்து அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை

    31.8.2025 முதல் 6.9.2025 வரை

    தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்ச ரிக்கிறார். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உயரிய கவுரவத்தை அடையும் நேரம்.நடக்குமா என்ற நிலையில் இருந்த காரியத்தை மன உறுதியுடன் தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.

    சிலருக்குப் புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். புதிய தொழில் நண்பர்கள் சேர்க்கை, தொழில் லாபம் ஆகியவை ஏற்படும். அரசியல் அரசு சார்ந்த தொழில், அரசுப் பணியாளர்களுக்கு பண மழை பொழியும். வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள்.புத்திர பாக்கியம். வீடு வாகன யோகம் என சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

    கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்து கொள்வார்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பெண்கள் யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்க கூடாது. பிரதோஷ நாட்களில் சந்தனம் அபிஷேகம் செய்து வழிபடுவதால் மனஅமைதி கூடும். பொருளாதார மேன்மை உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 24.8.2025 முதல் 30.8.2025 வரை

    மேன்மையான பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் புதனுடன் சேர்க்கை பெறுகிறார். இது மதன கோபால யோமாகும்.இது உங்கள் தோற்றத்தால் பிறரை ஈர்க்கும் சக்தியை கொடுக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகமாகும். நீங்கள் எதிர் கொள்ளும் காரியங்களில் வெற்றியும் முன்னேற்ற மும் உறுதி. தந்தை வழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்தில் நிலவிய தடைகள் அகலும்.வீடு, வாகன, சொத்து யோகம் உணடாகும். பெண்கள் ஆவணி மாத வளர்பிறை கால கட்டத்தில் மாங்கல்யம் மாற்றுவது, தாலி பெருக்கிப் போடுவது போன்றவற்றை செய்யலாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடு அகலும்.லாப கேதுவின் காலம் என்பதால் விநாயகர் வழிபாடு சிறப்பான பலன் தரும்.

    துலாம்

    வார ராசிபலன் 17.8.2025 முதல் 23.8.2025 வரை

    17.8.2025 முதல் 23.8.2025 வரை

    சகாயங்கள் நிறைந்த வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். தடைபட்ட பாக்கிய பலன்கள் சித்திக்கும். மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். தொழில் விரிவாக்க கடனும் கிடைக்கும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும்.

    நல்ல வருமானம் வரும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.

    ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 18.8.2025 அன்று மதியம் 2.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும். காதலர்கள் இடையே சிறிய தவறுகள் பெரும் கருத்து வேறுபாடுகளாக மாறும். ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 10.8.2025 முதல் 16.8.2025 வரை

    10.8.2025 முதல் 16.8.2025 வரை

    திருப்பு முனையான வாரம். கோட்சார குரு மிகச் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வருமானத் தடை அகன்று நிலையான முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    சேமிப்புகள் கூடும். சவுக்கியமும், சுகமும், நோய் நிவர்த்தியும் உண்டாகும். திருமணத் தடை அகலும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும். பெண்களுக்கு இது மிக மகிழ்ச்சியும் உற்சாகமும் தரக் கூடிய காலமாகும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.

    16.8.2025 அன்று காலை 11.43 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கு கொடுத்த பணம் வசூலாகுவதில் தடை, முறையற்ற ஆவணங்களால் வம்பு, வழக்கு, பஞ்சாயத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கோகுல அஷ்டமி அன்று ஸ்ரீ கிருஷ்ணருக்கு தயிர் சாதம் படைத்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 3.8.2025 முதல் 9.8.2025 வரை

    3.8.2025 முதல் 9.8.2025 வரை

    பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தடைபட்ட அனைத்து விதமான பாக்கிய பலன்களை அனுபவிக்கும் யோகம் உண்டாகும். மனஉறுதி, தைரியம், நேர்மறை எண்ணம், உதவி செய்யும் மனப்பான்மை கூடும். கடமைகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். ஆயுள் ஆரோக்கியம் கூடும். மருத்துவ செலவுகள் குறையும்.

    கௌரவ பதவிகள் உறுதியாகும். பொருளாதார மேன்மையும் செல்வப் பெருக்கமும் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். பேரன்,பேத்தி யோகம் கிடைக்கும். பாகப்பிரிவினையால் ஏற்பட்ட மன பேதம் சீராகும்.

    ஒரு சிலர் உயில் எழுதுவார்கள். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்தில் கிடைத்த பங்கு புகுந்த வீட்டில் கவுரவப்படுத்தும். சிலர் மன அமைதி மற்றும் நிம்மதிக்காக தீர்த்த யாத்திரை செல்ல திட்டமிடுவார்கள். சிறிய வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வசதியான வீட்டிற்கு செல்லலாம். வரலட்சுமி நோன்பு நாளில் மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 27.7.2025 முதல் 2.8.2025 வரை

    27.7.2025 முதல் 2.8.2025 வரை

    பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குருபகவானுடன் சஞ்சரிக்கிறார். நல்ல ஆன்மீக குரு கிடைக்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும்.தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும். இழுபறியாக கிடந்த அனைத்து விசயங்களும் சாதகமாகும். சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்கும்.

    நல்ல தொழில் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். சிலருக்கு வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.

    புத்திர விருத்தி உண்டு. திறமை மிக்க செயல்பாடுகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நல்ல உணவு, விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். வாழ்க்கைத் துணையுடன் நிலவிய பனிப் போர்மறையும். விவகாரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். கருட பஞ்சமி அன்று கருட தண்டகம் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை

    20.7.2025 முதல் 26.7.2025 வரை

    தனவரவில் தன் நிறைவு உண்டாகும் வாரம். ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. செயல் திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும். தொழிலில் நிலவிய மந்த நிலைகள் மாறி சூடு பிடிக்கும். லாபமும் அதிகரிக்கும். தாய், தந்தை உங்களை புரிந்து கொண்டு உதவுவார்கள். கடன் தொல்லை குறையும். மனம் நிம்மதியாக இருக்கும்.

    குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். தம்பதிகளிடம் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். திருமண முயற்சி கைகூடும். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். 20.7.2025 அன்று காலை 6.12 மணி முதல் 22.7.2025 அன்று காலை 8.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்காமல் இருப்பது நல்லது.

    வேலை பார்க்கும் இடத்தில் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு விலகும். ஆடி வெள்ளிக்கிழமை சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 13.7.2025 முதல் 19.7.2025 வரை

    13.7.2025 முதல் 19.7.2025 வரை

    விபரீத ராஜயோகமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். இது விபரீத ராஜயோக அமைப்பாகும். இதனால் தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் தேடி வரும். இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். குடும்ப உறவுகளிடம் உள்ள பகைகள் நீங்கும். பிரிந்த உறவுகள் சேரக்கூடிய வாய்ப்புகளும் வரும்.

    சுய ஜாதக கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். வைத்தியச் செலவு, நோயில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். வழக்கு வெற்றிகள் சாதகமாகும் அல்லது தீர்ப்பு தள்ளிப்போகும். அரசிடமிருந்து வீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும்.

    அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நண்பர்களுக்காக கடன் வாங்கி கொடுத்த கடனை நீங்களே ஏற்றுக் கொள்ள நேரலாம். சிலருக்கு அந்நிய தேசத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்புகளும் அமையும்.பயணத் தால் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவி இடை யே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புத்திர பாக்கியம் உண்டாகும். மறு திருமண வாய்ப்புகள் கூடி வரும். தினமும் அனுமன் சாலீசா படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை

    6.7.2025 முதல் 12.7.2025 வரை

    கனவுகள் யாவும் நிறைவேறும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் குரு, சூரியன் சேர்க்கை இருப்பதால் தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களையும் அனுபவிக்க கூடிய காலம். திட்டமிட்ட பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள்.

    திருமணம், குழந்தை பாக்கியம், உத்தியோகத்தில் உயர்வு, புதிய வீடு கட்டுதல், வாங்குதல் என்று இதுவரை எதையெல்லாம் பார்த்தீர்களோ அவற்றையெல்லாம் அடைந்து உயர்வை காணப்போகிறீர்கள். பொருளாதாரத்தில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். சமூக அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

    அரசாங்க ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட கடன் உதவி கிடைக்கும். வியாபாரிகளின் வருமானம் திருப்திகரமாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் உருவாகுவார்கள். அலுவலகத்தில் விரும்பிய இட மாற்றங்கள் உண்டாகலாம். வீண் பழிகள் அகலும். பழைய நண்பரை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். பெரியவர்களின் ஆசிகள் கிட்டும். பவுர்ணமி அன்று லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 29.6.2025 முதல் 5.7.2025 வரை

    29.6.2025 முதல் 5.7.2025 வரை

    எண்ணங்களும், லட்சியங்களும் நிறைவேறும் வாரம். 2,7ம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து தன் வீட்டை தானே பார்க்கிறார். ராசிக்கு குரு பார்வை என கிரக சஞ்சாரம் செய்வதால் துலாம் ராசிக்கு மிக சாதகமாக உள்ளது. சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கும்.

    நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வரும். கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலர் அழகு, அந்தஸ்து, ஆடம்பரம் நிறைந்த அப்பார்ட்மென்ட் வீடு வாங்குவீர்கள். பங்குச் சந்தை, ரேஸ், லாட்டரி போன்ற அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

    திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வர். குடும்பத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். தந்தையின் அன்பும், அனுசரனையும் கிடைக்கும். மாணவர்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பார்கள். வெள்ளிக்கிழமை மாதங்கியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிபலன் 22.6.2025 முதல் 28.6.2025 வரை

    22.6.2025 முதல் 28.6.2025 வரை

    நடப்பவையெல்லாம் நல்லதாகவே நடக்கும் வாரம். ராசிக்கு குரு மற்றும் சுக்ரன் பார்வை உள்ளது. இதுவரை இருந்த பயம் அகலும்.வேலையில் நல்ல சம்பளத்துடன் கூடிய இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அதே நேரம் வேலையில் கடினமாக உழைக்க நேரும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

    தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த உகந்த காலம். வராக்கடன்கள் வசூலாகும். விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணைவார்கள். பெரிய பொருள் உதவிகள் கிடைக்கும். சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்த வீட்டிற்கு மாறு வார்கள். புதிய சொத்துக்கள் சேரும். புத்திர பிராப் தம் கிட்டும்.

    22.6.2025 அன்று இரவு 11.03 முதல் 24.6.2025 இரவு 11.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர் காலத்திற்கு திட்டமிட்டு படிப்பது அவசியம். பிரதோஷத்தன்று இளநீர் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்வது சிறப்பான முன்னேற்றத்தை தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×