சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்

பங்குனி மாத ராசிபலன்

Published On 2024-03-13 04:51 GMT   |   Update On 2024-03-13 04:54 GMT

எந்தக் காரியத்தையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் சிம்ம ராசி நேயர்களே!

பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். தன ஸ்தானத்தில் கேது இருப்பதால், வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே, அடுத்த தொகை உங்கள் கரங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்களில் தடைகளும், தாமதங்களும் உருவாகி, மன உளைச்சலைத் தரலாம். திறமைமிக்கவர்கள் அருகில் இருந்தும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் குறுக்கீடுகள் ஏற்படும். எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நேரம் இது.

செவ்வாய் - சனி சேர்க்கை

மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், மாதம் முழுவதும் அங்குள்ள சனியோடு சேர்ந்து சஞ்சாரம் செய்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கையின் விளைவாக, எண்ணற்ற பிரச்சினைகள் இல்லம் தேடி வரலாம். செவ்வாய், உங்கள் ராசிக்கு யோககாரகன் ஆவார். அவர் சப்தமாதிபதி சனியோடு இணையும்போது குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு, மருத்துவச் செலவு களால் விரயங்கள் ஏற்படும். அரசு வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கட்டிய வீட்டாலும் பிரச்சினை, கடன் சுமையாலும் தொல்லை என்ற நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

புதன் வக்ரம்

பங்குனி 13-ந் தேதி, மீனத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். தன - லாபாதிபதியான புதன் நீச்சமும், வக்ரமும் பெற்று சஞ்சரிக்கும் இந்த வேளையில், பொருளாதாரத்தில் மிகுந்த தட்டுப்பாடு ஏற்படும். 'வாங்கியதை கொடுக்க முடியவில்லை, கொடுத்ததை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உறவினர் பகை அதிகரிக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள், வீண்பழிக்கு ஆளாகும் நிலை உருவாகும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக அமையும் நேரம் இது. குடும்பச் செலவு கூடும் காரணத்தால், கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

மீனம் - சுக்ரன்

பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன் உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு சேர்ந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். அதே நேரம் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுவதால் படிப்படியாக நல்ல பலன்கள் நடைபெறும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். நல்ல மனிதர்களின் நட்பால் புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கல்யாண வாய்ப்பு கைகூடும். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. பழுதான வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கிப் பயணிக்கும் எண்ணம் நிறைவேறும்.

ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்கும் நிலை உருவாகும்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக பாராட்டு கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச் சுமை கூடினாலும், அதற்கேற்ற விதத்தில் ஊதியம் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். மாணவ - மாணவிகளுக்கு பாராட்டும், புகழும் உண்டாகும். பெண்களுக்கு திரு மணத்தடை அகலும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

மார்ச்: 14, 15, 18, 19, 25, 26, 29, 30, ஏப்ரல்: 10, 11.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

Similar News