search icon
என் மலர்tooltip icon

    சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்

    சிம்மம்

    பங்குனி மாத ராசிபலன்

    எந்தக் காரியத்தையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் சிம்ம ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். தன ஸ்தானத்தில் கேது இருப்பதால், வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே, அடுத்த தொகை உங்கள் கரங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்களில் தடைகளும், தாமதங்களும் உருவாகி, மன உளைச்சலைத் தரலாம். திறமைமிக்கவர்கள் அருகில் இருந்தும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் குறுக்கீடுகள் ஏற்படும். எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நேரம் இது.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், மாதம் முழுவதும் அங்குள்ள சனியோடு சேர்ந்து சஞ்சாரம் செய்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கையின் விளைவாக, எண்ணற்ற பிரச்சினைகள் இல்லம் தேடி வரலாம். செவ்வாய், உங்கள் ராசிக்கு யோககாரகன் ஆவார். அவர் சப்தமாதிபதி சனியோடு இணையும்போது குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு, மருத்துவச் செலவு களால் விரயங்கள் ஏற்படும். அரசு வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கட்டிய வீட்டாலும் பிரச்சினை, கடன் சுமையாலும் தொல்லை என்ற நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    புதன் வக்ரம்

    பங்குனி 13-ந் தேதி, மீனத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். தன - லாபாதிபதியான புதன் நீச்சமும், வக்ரமும் பெற்று சஞ்சரிக்கும் இந்த வேளையில், பொருளாதாரத்தில் மிகுந்த தட்டுப்பாடு ஏற்படும். 'வாங்கியதை கொடுக்க முடியவில்லை, கொடுத்ததை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உறவினர் பகை அதிகரிக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள், வீண்பழிக்கு ஆளாகும் நிலை உருவாகும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக அமையும் நேரம் இது. குடும்பச் செலவு கூடும் காரணத்தால், கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன் உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு சேர்ந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். அதே நேரம் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுவதால் படிப்படியாக நல்ல பலன்கள் நடைபெறும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். நல்ல மனிதர்களின் நட்பால் புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கல்யாண வாய்ப்பு கைகூடும். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. பழுதான வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கிப் பயணிக்கும் எண்ணம் நிறைவேறும்.

    ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்கும் நிலை உருவாகும்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக பாராட்டு கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச் சுமை கூடினாலும், அதற்கேற்ற விதத்தில் ஊதியம் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். மாணவ - மாணவிகளுக்கு பாராட்டும், புகழும் உண்டாகும். பெண்களுக்கு திரு மணத்தடை அகலும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 14, 15, 18, 19, 25, 26, 29, 30, ஏப்ரல்: 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    சிம்மம்

    மாசிமாத ராசிபலன்

    காரியத்தை கனகச்சிதமாக முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன-லாபாதிபதி புதனும் இருக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பண வரவும் திருப்தி தரும். கெட்டி மேளம் கொட்டும் சூழ் நிலையும் உருவாகும். கண்டகச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் உடல் நலத்தில் கவனம் தேவை.

    கும்பம்-புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து `புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி, கலைத்துறை சம்பந்தமாக எடுத்த முயற்சிகளிலும் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் மேல்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் இருந்த தடை அகலும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த புது முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கள நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவீர்கள். திடீர் தனவரவு உண்டு.

    மகரம்-சுக்ரன்

    மாதத்தின் தொடக்க நாளிலேயே, மகரத்திற்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் யோககாரகன் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறப்புகளின் திருமணங்களை முன் நின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கள் கிடைக்கும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம்.

    மீனம்-புதன்

    மார்ச்-2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தன-லாபாதிபதியான புதன் நீச்சம் பெறுவதால் வருமான பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை செய்வதில் சில தடுமாற்றங்களை சந்திப்பீர்கள். இருப்பினும் குரு பார்வை இருப்பதால் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடி விடும். உறவினர் பகை அதிகரிக்கும். உடல்நலம் கருதி ஒரு தொகையைச் செலவிட நேரிடும்.

    கும்பம்-சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ராசிநாதனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் யோகமான நேரம் தான். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உடன் பிறப்பு களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொழில் செய்பவர் களுக்கு கணிசமான லாபம் கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு எதிர்பார்த்த படி கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டு. பெண்களுக்கு கரைந்த சேமிப்பு களை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 15, 16, 20, 21, 28, 29,

    மார்ச்: 2, 3.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    சிம்மம்

    தை மாத ராசிபலன்

    எந்த சூழ்நிலையிலும் கொள்கையை மாற்றிக்கொள்ளாத சிம்ம ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகின்றார். உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கின்றார். பலம் பெற்ற குருவின் பார்வை என்பதால் நல்ல பலன்கள் நடைபெற வேண்டும். ஆனால் கண்டகச் சனியின் ஆதிக்கம் இருக்கின்றது. எனவே இடையிடையே தாக்குதல்களும், தடைகளும் வரத்தான் செய்யும். அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் கவலைப்பட வேண்டாம். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது.

    மே-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி பலம்பெற்று சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. 'குரு பார்க்கக் கோடி நன்மை' என்பதற்கேற்ப நினைத்த காரியங்கள் நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். தொழில் ரீதியாக வந்த இடையூறுகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். எனவே உடன்பிறப்பு கள் வழியில் ஒற்றுமை கூடும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புனிதப் பயணங்களும் அதிகரிக்கும்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ராசிநாதன் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கும் இந்த நேரம், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசு வழி ஆதரவு உண்டு. வேலைக்காக நீங்கள் எடுத்த முயற்சி பலன் தரும். தற்காலிகப்பணி ஒரு சிலருக்கு நிரந்தரப் பணியாக மாறலாம். பிறரை சார்ந்திருப்பவர்கள் தனித்து இயங்க எடுத்த முயற்சி வெற்றிபெறும்.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசி நாதன் சூரியனோடு யோககாரகன் செவ்வாய் இணைவதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். காரியங்கள் துரிதமாக நடைபெறும். 'கவலை' என்ற மூன்றெழுத்து உங்கள் அகராதியை விட்டு அகலப்போகின்றது. இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். இல்லம் தேடி சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும் நேரமிது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்குப் புதிய கூட்டாளிகளால் பொருளாதாரநிலை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமை பளிச்சிடும். மாணவ-மாணவி யர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 19, 20, 24, 25, 31, பிப்ரவரி: 1, 3, 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    சிம்மம்

    மார்கழி மாத ராசிபலன்

    வேகமும் விவேகமும் கொண்டு செயல்படும் சிம்ம ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதுவும் குரு வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டு. ஆனால் இம்மாதம் கண்டகச் சனியின் ஆதிக்கம் வருகிறது. எனவே மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்தாலும் இதைச் செய்வோமா, வேண்டாமா? என்ற இரட்டித்த சிந்தனை அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகையாலும் பிரச்சினைகள் உருவாகலாம். கவனம் தேவை.

    கும்ப ராசியில் சனி

    தொடர்ந்து மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான், மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு ஏராளமான மாற்றங்களை வழங்கப்போகிறது. கண்டகச்சனியாக வருவதால் தொழில் போட்டிகள் அதிகரிக்கும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். வரவு வருவதற்கு முன்னரே செலவு காத்திருக்கும்.

    ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். கண்டகச்சனியின் ஆதிக்கத்தால் உத்தியோக மாற்றமும், ஊர் மாற்றமும் உறுதியாகலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தளரவிட வேண்டாம். சனிக்கவசம் பாடி சனி பகவானை தொடர்ந்து வழிபடுவதோடு, ஜாதகத்தில் சனியின் பலம் அறிந்து அதற்குரிய சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டால் செல்வ விருத்தியில் தடை ஏற்படாது.

    விருச்சிக-சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக்ரன் 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே இக்காலம் ஒரு இனிய காலமாகவே அமையும். தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    தனுசு-செவ்வாய்

    தனுசு ராசியில் மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளையே வழங்குவார். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் நன்மை ஏற்படும். அதிகார பலம் பெற்றவர்களின் நட்பால் சில பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீடு கட்டுவது, கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும்.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது தனவரவு தாராளமாக வந்துசேரும். படுத்த படுக்கையாக படுக்கையில் கிடந்தவர்கள் கூட பம்பரமாக சுழன்று பணிபுரிய வாய்ப்புகள் கைகூடிவரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு தாமதப்பட்ட பொறுப்புகள் தாமாக வந்து சேரும்.

    வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு தடைகளை மீறி முன்னேற்றம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எதையும் திட்டவட்டமாக முடிவெடுக்க இயலாது. மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு ஒரு பிரச்சினை முடிவடைந்தால் அடுத்த பிரச்சினை தலைதூக்கும். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 22, 23, 27, 28,

    ஜனவரி: 3, 4, 7, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    சிம்மம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    நினைத்ததை உடனே செய்ய விரும்பும் சிம்ம ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தன லாபாதிபதியான புதனோடும், பாக்கியாதிபதியான செவ்வாயோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே இந்த மாதம் யோகமான மாதம்தான். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் லாபம் கிடைக்கும். அஷ்டமத்தில் ராகு சஞ்சரித்தாலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதுமே மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. 8-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால் பூர்வீகச் சொத்துத் தகராறுகள் மீண்டும் தலைதூக்கும். பிரி வினையான சொத்துகள் திருப்தியாக இல்லையே என்று உடன்பிறப்புகள் பஞ்சாயத்தார்களை அணுகுவர்.

    உறவினர்களின் அனுசரிப்பு கொஞ்சம் குறையலாம். அதே நேரத்தில் அஷ்டமாதிபதி குரு என்பதால் எதிர்பாராத விதத்தில் மனநிறைவு தரக்கூடிய ஒருசில காரியங்களும் நடைபெறும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வழிவகுத்துக் கொள்வீர்கள்.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சகாய ஸ்தானாதிபதியான சுக்ரன் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். எனவே ஆரம்பத்தில் சில விஷயங்கள் அச்சுறுத்தலாகத் தோன்றலாம். சில காரியங்கள் முடியாமல் இழுபறி நிலையில் இருக்கலாம். ஆனால் கார்த்திகை 14-ம் தேதி சுக்ரன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகி வந்த பின்னால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே மாதத்தின் பிற் பகுதியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் ஏராளமாக வரலாம். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு- புதன்

    உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங் களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து விதமான யோகங்களும் நன்மைகளும் கிடைக்கும் நேரமிது.

    குறிப்பாக பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். சேமிப்ப உயரும். செயல்பாடுகளில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அயல்நாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வரலாம்.

    சிம்மம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    நல்ல காரியங்கள் செய்வதை குறிக்கோளாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

    ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இம்மாதம் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று குருவால் பார்க்கப்படுகின்றார். எனவே 'நீச்ச பங்க ராஜயோக' அடிப்படையில் கிரக பலன்கள் வந்து சேரும். எனவே எந்தக் காரியமும் முதல் முயற்சியில் வெற்றி அடையா விட்டாலும், அடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையும், ஆன்மிகப் பெரியவர்களின் அறிவுரையும் கைகொடுக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடி உண்டு.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் கூடுதலாக இருக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடன் சுமை கூடிக்கொண்டே போகின்றதே என்று கவலைப்படுவீர்கள். இட மாற்றங்களும், வீடு மாற்றங்களும் இனிமை தரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் பொழுது நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும். குறிப்பாக அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும், பஞ்சமாதிபதியாகவும் குரு விளங்குவதால் பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் மேற்பார்வையிலேயே பிள்ளைகளை வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துத் தகராறுகள் மீண்டும் தலை தூக்கலாம். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைய குருவை வழிபடுவது நல்லது.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறும்பொழுது தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறும் சூழ்நிலை உண்டு. உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றம் ஏற்படலாம். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் வரலாம்.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். தன லாபாதிபதி சுக ஸ்தானத்திற்கு வரும்பொழுது தனவரவு திருப்தி தரும். சுகங்களும், சந்தோஷங்களும் கூடும். குறுக்கீடு சக்திகள் அகலும். நெருக்கடி நிலை மாறும். நேசிப்பவர்களின் எண்ணிக்கை உயரும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 18, 19, 29, 30, நவம்பர் 9, 10, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா நீலம்.

    சிம்மம்

    புரட்டாசி மாத ராசிபலன்

    18-09-2023 முதல் 17-10-2023 வரை

    மக்கள் சேவையே மகேசன் சேவை என்று சொல்லும் சிம்ம ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன், யோககாரகன் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அதுமட்டுமல்ல, ராசியிலேயே தன-லாபாதிபதி புதனும் இருக்கிறார். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தொடர்ந்து இல்லத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்கள் எல்லாம் சாதகமாகவே அமையும் நேரம் இது.

    புதன் வக்ரம்

    புரட்டாசி 10-ந் தேதி கன்னி ராசியில் புதன் வக்ரம் பெறுகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. புதன் உச்சம் பெற்று வக்ரம் பெறுவதால் பொருளாதாரத்தில் தட்டுப்பாடு அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும். மாமன், மைத்துனர் வழியில் மனக்கசப்புகள் ஏற்பட்டு அகலும். சேமிப்புக் கரைந்தாலும் அது சுபச்செலவாகவே மாறும். தொழில், உத்தியோகத்தில் திடீர் இடமாற்றம் ஏற்படலாம். உத்தியோக முயற்சிக்காக ஏற்பாடு செய்தவர்களுக்கு புதிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

    துலாம் - செவ்வாய்

    புரட்டாசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு 4, 9-க்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது. பூர்வீக சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். தந்தை வழியில் இருந்த உறவு பலப்படும். ஒரு சிலருக்கு பெற்றோர் வழியில் தொழிலுக்கான மூலதனம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி, சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழிலில் பங்குதாரர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 28-ந் தேதி துலாம் ராசிக்குப் புதன் வருகிறார். இக்காலம் உங்களுக்கு இனியகாலமாக அமையும். தன - லாபாதிபதி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தநேரத்தில் எதைச்செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நம்பிக்கைகள் நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு பணம் சரளமாக புரளும். உத்தி யோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ-மாணவிகளுக்கு எதிர் பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு மாதத் தொடக்கம் மகிழ்ச்சியாக அமையும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு விரயங்கள் கூடும். குடும்ப ஒற்றுமை குறையாமல் இருக்க விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 20, 21, 22, அக்டோபர்: 1, 2, 6, 7, 13, 14. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    சிம்மம்

    தமிழ் மாத ராசிபலன்கள்

    18-08-2023 முதல் 17-09-2023 வரை

    வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு சந்திரன், செவ்வாய், புதன், சுக்ரன் ஆகிய நான்கு கிரகங்களும் இணைந்து கூட்டுக் கிரக யோகத்தை உருவாக்குகிறார்கள். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம். எனவே, திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.

    தன்னம்பிக்கை துளிர்விடும். தனித்து இயங்குபவர்கள் பொருளாதார முன்னேற்றம் காண்பர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்திணைவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். கடக - சுக்ரன் ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார்.

    உங்கள் ராசிக்கு 3, ௧௦ ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன், விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது தொழில் மாற்றம் மற்றும் உத்தியோக மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகம். வாடகைக் கட்டிடத்தில் இயங்கிய தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, புதிய பங்குதாரர்களை சேர்த்துக்கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட மாறுதல்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு ஊதிய உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து, வேறு இடத்தில் வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படும்.

    கன்னி - செவ்வாய் ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும் போது பொருளாதாரம் விருத்தியாகும். இடம் வாங்குதல், வீடு வாங்குதல், மனை கட்டிக் குடியேறும் அமைப்பு போன்றவற்றிற்கு அடித்தளம் அமையும் நேரம் இது.

    தன ஸ்தானத்தில் செவ்வாய் உலாவரும் போது, பூமி விற்பனையாலும், பங்குச் சந்தையாலும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சகோதர வழி சச்சரவுகள் மாறி பாகப்பிரிவினைக்கு வழிபிறக்கும்.

    மகர - சனி சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம் உங்களுக்கு நன்மைகளைக் கொடுக்கும். கண்டகச் சனியில் இருந்து விடுபடுவதால் கடுமையாக முயற்சித்தும்இதுவரை நடைபெறாத காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    இடம், பூமி சேர்க்கை, இல்லத்தில் சுப காரியங்கள், தொழில் முன்னேற்றங்கள், உத்தியோகத்தில் சம்பள உயர்வு போன்றவை திருப்திகரமாக அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளும், செல்வாக்கும் அதிகரிக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு தடைப்பட்ட காரியங்களை தகுந்தவிதத்தில் செய்து முடிப்பீர்கள்.

    தன் வக்ர நிவர்த்தி சிம்மத்தில் சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்குத் தன - லாபாதிபதியான புதன் வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். வியாபாரப் போட்டிஅகலும். தொழில் வெற்றிநடைபோடும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் அகலும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தானாக வந்துசேரும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொன்னான நேரம் இது. தொழில் செய்பவர்கள் விரும்பியபடியே லாபத்தை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.

    மாணவ - மாணவிகள் மகத்தான பலனைப் பெறுவர். பெண்களுக்கு கொடுக்கல்- வாங்கல் சரளமாகும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 23, 24, செப்டம்பர்: 4, 5, 8, 9, 16, 17. மகிழ்ச்சி தரும்

    வண்ணம்:- வைலட்.

    சிம்மம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.7.23 முதல் 17.8.23 வரை

    சிம்மம்நம்பியவர்களுக்கு கைகொடுத்து உதவும் சிம்ம ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் லாபாதிபதி புதனோடு இணைந்திருக்கிறார். எனவே தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்குமென்றாலும் விரயங்களும் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவற்றைச் செய்ய முன்வருவீர்கள். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும் அது வக்ர இயக்கத்தில் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. விட்டுக் கொடுத்துச்செல்வதன் மூலம் குடும்ப ஒற்றுமை பலப்படும்.

    மேஷ - குரு சஞ்சாரம்

    நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம்தான். அதிலும் 5-ம் பார்வையாக பார்க்கிறார். 'ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பது ஜோதிட நியதி. எனவே பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அருளா ளர்களின் ஆலோசனையால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். 'ரண சிகிச்சை செய்தால்தான் நோய் குணமாகும்' என்று சொன்ன மருத்துவர்கள், இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கி விடலாம் என்று சொல்வார்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

    குருவின் பார்வை சகோதர மற்றும் சகாய ஸ்தானத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிகின்றது. எனவே வியாபாரம் வெற்றி நடை போடும். வீடு, இடம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உங்களுக்கென்று தனி மரியாதை கிடைக்கும். கடமையைச் செவ்வனே செய்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்வோர், தனியாகத் தொழில் தொடங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள்.

    சிம்ம - புதன்

    ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தன -லாபாதிபதியான புதன், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் மிகுந்த யோகமான நேரமாகும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். வருமானம் உயரும். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    பழைய பாக்கிகள் வசூலாகும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இப்பொழுது விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வரலாமா? என்று சிந்திப்பர். பொதுவாக தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நேரம் இது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அவர்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும். வியாபாரம், தொழில் புரிபவர்களுக்கு மாதக் கடைசியில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவ -மாணவிகளுக்கு எதிர்பார்த்த துறை அமையும். பெண்கள் சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்க நேரிடும். தடைகள் அகன்றோடும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 17, 23, 24, 27, 28, ஆகஸ்டு: 8, 9, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்

    சிம்மம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    சகலக் கலைகளிலும் வல்லவர்களாக விளங்கும் சிம்ம ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, மாத தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கிறார். 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் மாதம் இது. தொல்லை தந்தவர்கள் விலகுவர். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கண்டகச்சனியின் ஆதிக்கம் இருப்பதால் இடையிடையே ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டு நிவர்த்தியாகும்.

    மிதுன - புதன்

    ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியான புதன், லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிப்பது யோகம்தான். அதுமட்டுமல்லாமல் சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் பலன் கிடைக்கும். அரசாங்க உதவியை நாடுபவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக அழைப்புகள் வரலாம். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்திலேயே பணி உயர்வும், சம்பள உயர்வும் ஏற்படும். சேமிப்பு உயர எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    சிம்ம - செவ்வாய்

    ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகிறது. எனவே 'குரு மங்கல யோகம்' ஏற்படுகிறது. சுபச்செலவுஅதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் உதவிகள் கிடைத்து தொழில் வளர்ச்சி கூடும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையும் உண்டு. குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் மருத்துவம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    சிம்ம - சுக்ரன்

    ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் குருவின் பார்வை, செவ்வாய் மற்றும் சுக்ரன் மீது பதிவதால் ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சில முக்கியப் பொறுப்பு கிடைக்கும். மேல்மட்டத் தலைவர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்களின் உதவியோடு முன்னேற்றம் காண்பீர்கள்.

    கடக - புதன்

    ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், விரய ஸ்தானத்திற்கு வரும்போது கட்டுக்கடங்காத வகையில் செலவு ஏற்படும். பெற்றோரின் மணிவிழா, பிள்ளைகளின் மணவிழா, இடம், பூமி வாங்கும் அமைப்பு, வாகன மாற்றம் போன்றவற்றுக்காக செலவிட்டு, வீண்விரயத்தை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் ஆரோக்கியத்தை சீராக்கிக்கொள்ள இயலும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவோடு மிகச்சிறந்த பொறுப்புகள் வரலாம். வியாபாரம், தொழில் செய்பவர்கள் புதிய கிளை திறக்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அலுவலகப் பொறுப்புகள் கூடும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ- மாணவிகளுக்கு வெற்றி வாகை சூடும் அமைப்பு உண்டாகும். பெண்களுக்கு மனநிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படும் நேரம் இது. பணிபுரியும் பெண்களுக்கு பணிச்சுமை கூடும். அதற்கேற்ப ஊதிய உயர்வு வந்து சேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 26, 27, 30 ஜூலை: 1, 2, 11, 12, 16.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    சிம்மம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    15.5.23 முதல் 15.6.23 வரை

    மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்து முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியைக் குரு பகவான் பார்க்கிறார். எனவே இம்மாதம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறப்போகிறது. கண்டகச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் நடைபெறும். காரணம் குருவின் பார்வைதான். பஞ்சம அஷ்டமாதிபதியான குருவின் பார்வைக்கு பலன் அதிகம் உண்டு.

    ராகு-கேது சஞ்சாரம்

    பின்னோக்கி நகரும் கிரகங்களான ராகு-கேதுக்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வழிகாட்டும். பாக்கிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். அவர் குருவோடு இணைந்திருப்பதால் அனைத்து யோகங்களையும் வழங்குவார். அதே சமயம் 3-ல் சஞ்சரிக்கும் கேதுவையும் குரு பார்க்கிறார். குரு பார்வை காரணமாக கேது சஞ்சரிக்கும் ஸ்தானமும் புனிதமடைகிறது. எனவே இடையூறு சக்திகள் அகலும். சகோதரர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நிலுவையில் இருந்த வழக்குகளில் நீங்கள் நினைத்தது போல் தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத தன லாபங்கள் வந்து இதயத்தை மகிழ்விக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைத்து நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கப்போகிறது.

    கடக - சுக்ரன்

    வைகாசி 16-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள நீச்சம் பெற்ற செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வருவதால், தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். 'எவ்வளவு உழைத்தாலும் வியாபாரத்தில் அதற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று நினைத்து, புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொருளாதார தட்டுப்பாடு அகலும். என்றாலும் ஒருதொகை செலவழிந்த பின்னரே அடுத்த தொகை கைக்கு கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாறலாம். 'மக்கள் செல்வாக்கு அதிகரிக்க என்ன செய்யலாம்' என்று யோசிப்பீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

    ரிஷப - புதன்

    வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்குப் புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியான புதன், சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். இது ஒரு பொற்காலமாகும். எதை எந்த நேரத்தில் செய்ய நினைத்தீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி பெறுவீர்கள்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து கூடும். மாணவர்களின் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் உயரும். கணவன் - மனைவி உறவில் கனிவும், பாசமும் கூடும். பணிபுரியும் பெண்களுக்கு பரிசீலனையிலிருந்த பதவி உயர்வு கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 18, 19, 23, 24, 30, 31, ஜூன்: 3, 4, 5, 14, 15.மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.

    சிம்மம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    14.4.2023 முதல் 14.5.2023

    கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு வெற்றி காணும் சிம்ம ராசி நேயர்களே!

    சித்திரை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். சனியின் சப்தம பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. கண்டகச் சனியின் ஆதிக்கமும், சூரியன் மற்றும் ராகு சேர்க்கையும் இருப்பதால் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். கடன்சுமை கூடிக்கொண்டே செல்லும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குருவின் பார்வை உங்கள் ராசியில் பதியப்போவதால், மாதத் தொடக்கத்தில் முதல் வாரம் மகிழ்ச்சி குறைவாக இருந்தாலும், இரண்டாம் வாரத்தில் இருந்து இனிய பலன்கள் கிடைக்கும். சித்திரை 9-க்கு மேல் நல்ல பலன் நடைபெறப்போகிறது.

    சனியின் சஞ்சாரம்

    மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கின்றார். இதனை 'கண்டகச்சனி' என்று சொல்வர். வாக்கிய கணித ரீதியான இந்த பெயர்ச்சியின் விளைவாக உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. நெருங்கிப் பழகுபவர்களால் நிம்மதி குறையும். அதிக முயற்சியின் விளைவாகவே ஒருசில காரியங்கள் கைகூடும். உத்தியோகம், தொழிலில் நல்ல சந்தர்ப்பங்கள் வந்தாலும் விலகிச்செல்லும். குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாது. பணப்பரிமாற்றங்களில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாய்-சனி பார்வை இருப்பதால் மிகக் கவனத்தோடு செயல்படுவதே நல்லது.

    மேஷ - குரு

    சித்திரை 9-ந் தேதி மேஷ ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகின்றார். அப்பொழுது அவரது பார்வை உங்கள் ராசியிலும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. 'குரு பார்வையால் கோடி தோஷம் விலகும்' என்பார்கள். அந்த அடிப்படையில் அதன் பார்வை அற்புதமான பலன்களை வழங்கப்போகின்றது. ஆரோக்கியம் சீராகும். இனிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். மருத்துவச் செலவுகளாலும், மற்ற காரியங்களின் தடைகளாலும் மனவருத்தத்தில் இருந்த உங்களுக்கு, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். சூரியனைக் கண்ட பளித்துளி விலகுவதுபோல, பட்ட துயரங்கள் விலகி ஓடும். சகோதர வர்க்கத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். தினமும் ஒரு நல்ல செய்தி வந்துசேரும் நேரம் இது. இக்காலத்தில் யோகபலம் பெற்ற நாளில் அனுகூல தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நற்பலன்களை வழங்கும்.

    மிதுன - சுக்ரன்

    சித்திரை 20-ந் தேதி முதல் மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்போது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மூடிக்கிடந்த தொழிலுக்கு திறப்புவிழா நடத்திப் பார்ப்பீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை அமையும். அரசு வழியில் செய்த முயற்சியிலும் அனுகூலம் உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும்.

    இம்மாதம் லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஏப்ரல்: 20, 21, 25, 26, மே: 2, 3, 6, 7, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    ×