என் மலர்tooltip icon

    சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்

    சிம்மம்

    2024 ஐப்பசி மாத ராசிபலன்

    எந்த காரியமாக இருந்தாலும் அதை முடித்துக் காட்டும் சிம்ம ராசி நேயர்களே!

    ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் சூரியன் நீச்சம் பெறுகிறார். அவரோடு தன - லாபாதிபதி புதனும் இணைந்திருக்கிறார். எடுத்த முயற்சி களில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். விரயங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

    பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை மன வருத்தம் தருவதாக அமையக்கூடும். காரியங்கள் பலவும் முடிவடைவது போல் வந்து, தடைபட்டு நிற்கும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்ய வேண்டிய நேரம் இது.

    செவ்வாய் நீச்சம்

    ஐப்பசி 6-ந் தேதி, கடக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். கடக ராசியானது, செவ்வாய்க்கு நீச்ச வீடாகும். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகமான செவ்வாய் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. சொத்துக்களாலும் பிரச்சினை, சொந்தங்களாலும் பிரச்சினை உருவாகும். வாங்கிய இடத்தை விற்க நேரிடும்.

    உடன் பிறப்புகளால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக்கொள்ள நேரிடும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. தொழிலில் தொய்வு ஏற்படும். பங்குதாரர்கள் விலகிக்கொள்வதாக சொல்வர்.

    விருச்சிகம் - புதன்

    ஐப்பசி 8-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிகுந்த யோகமான நேரமாகும். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார வளர்ச்சி கூடும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

    தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற, நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர் பகை அகலும். உத்தியோகத்தில் நல்ல ஊதியத்துடன் கூடிய, வெளிநாட்டு வேலை ஒன்று அமையலாம். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    சனி வக்ர நிவர்த்தி

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், ஐப்பசி 18-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். இப்பொழுது சனி பலம் பெறுவதால் கண்டகச் சனியின் ஆதிக்கம் கூடுகிறது. எனவே நினைத்தது நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். நீண்ட காலத்திற்கு முன்பு வந்த நோய், இப்பொழுது மீண்டும் தலைதூக்கும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, பணிநீக்கம் செய்யப்படும் சூழல் உருவாகும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிப்பதை முன்னிட்டு மருத்துவச் செலவுகளும் கூடும். பிறரை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.

    தனுசு - சுக்ரன்

    ஐப்பசி 22-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானத்திற்கும், தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியானவர், சுக்ரன். அவர் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

    ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். தொழிலில் ஏற்பட்ட குறுக்கீடுகள் அகலும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொருளாதார பிரச்சினை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது.

    கலைஞர்கள் தடைகளை முறியடித்து, வெற்றி காண வேண்டிய நேரம் இது. மாணவ - மாணவிகள், படிப்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். பெண்களுக்கு நிதானமும், பொறுமையும் தேவை. பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கம் காணப்படும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    அக்டோபர்: 22, 23, 29, 30, நவம்பர்: 3, 4, 5, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு

    சிம்மம்

    2024 புரட்டாசி மாத ராசிபலன்

    பொதுவாழ்வில் அர்ப்பணிப்பு கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

    புரட்டாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனாதிபதியான புதன், உங்கள் ராசியிலேயே இருக்கிறார். இந்த பரிவர்த்தனை யோகம் மிக சிறந்த யோகமாகும்.

    தொழில் முன்னேற்றம், உத்தியோக முன்னேற்றம், பொருளாதார நிலை உச்சம், புதிய முயற்சிகளில் வெற்றி, குடும்ப முன்னேற்றம் போன்றவை சிறப்பாக இருக்கும். மேலும் 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றம், இடமாற்றம் ஆகியவையும் திருப்திகரமாக அமையும். கல்யாணக் கனவுகள் நனவாகி மகிழ்ச்சியை வழங்கும்.

    சனி வக்ரம்

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இந்த மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் கண்டகச்சனியாக செயல்படுகிறார். அவர் வக்ரம் பெறுவதால் நன்மைகள் உண்டாகும். என்றாலும் குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.

    வாழ்க்கை துணையோடு பிரச்சினையும், வரவுக்கு மீறிய செலவுகளும் ஏற்படலாம். எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது நல்லது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. மூட்டுவலி, முழங்கால் வலி, கழுத்து வலி என்று, ஏதாவது ஒரு உடல் உபாதை வந்து கொண்டே தான் இருக்கும்.

    புதன் உச்சம்

    புரட்டாசி 3-ந் தேதி, கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான புதன், தன ஸ்தானத்திலேயே உச்சம் பெறுவது யோகம்தான். அதே நேரத்தில் புதன் லாபாதிபதியாகவும் இருப்பதால், தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

    போட்டி கடை வைத்தோர் விலகுவர். புதிய திருப்பங்கள் பலவற்றையும் சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் நினைத்த மாத்திரத்தில் செய்து முடிப்பீர்கள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் கிடைக்கலாம்.

    துலாம் - சுக்ரன்

    புரட்டாசி 3-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அது சுக்ரனுக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சகாய ஸ்தானாதிபதியான அவர் வலிமை அடையும் இந்த நேரத்தில், அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும்.

    தொழில் ஸ்தானாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், தொழில் வளர்ச்சியும் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். முக்கிய புள்ளிகள் உங்கள் இல்லம் தேடி வந்து, வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்து கொடுப்பர்.

    துலாம் - புதன்

    புரட்டாசி 20-ந் தேதி, துலாம் ராசிக்கு புதன் செல்கிறார். அவர் அங்குள்ள சுக்ரனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் படிப்படியாக வளர்ச்சி கண்டு பரவசம் அடைவீர்கள். பகல் இரவாக பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும்.

    உத்தியோகத்தில் உள்ளவர்கள் கேட்ட சலுகைகளை கொடுக்க, உயர் அதிகாரிகள் முன்வருவர். வீடு கட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுது பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படலாம்.

    வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, எதிர்பார்த்தபடியே லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். மாணவ - மாணவிகளுக்கு எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். பெண்களுக்கு சுபச் செலவுகள் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    செப்டம்பர்: 21, 22, 25, 26, அக்டோபர்: 3, 4, 6, 7, 8.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    சிம்மம்

    2024 ஆவணி மாத ராசிபலன்

    துவளாத மனதிற்கு சொந்தக்காரரான சிம்ம ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். அவரோடு தொழில் மற்றும் சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரனும் இணைந்து இருக்கிறார்.

    எனவே தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. உடன்பிறப்புகள் அல்லது உடன்இருப்பவர் களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நேரம் இது. ஆயினும் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், சில நேரங்களில் தடைகளும், தாமதங்களும் வரத்தான் செய்யும். அவ்வப்போது ஆன்மிகப் பெரியவர்களும், அனுபவஸ்தர்களும் தரும் ஆலோசனை கைகொடுக்கும்.

    சனி - சூரியன் பார்வை

    கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், இம்மாதம் முழுவதும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன் அவரைப் பார்க்கிறார். இந்தப் பகை கிரகங்களின் பார்வை அவ்வளவு நல்லதல்ல. இதன் விளைவாக வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் தோன்றி மறையும். வாரிசுகளின் முன்னேற்றத்தில் சில தடைகள் வந்து அலைமோதும்.

    குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு நோய் நொடிகள் வந்து மருத்துவச் செலவை உருவாக்கலாம். நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றுமாக இருக்கும். நண்பர்களிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றம் வந்து, மனவருத்தத்தை ஏற்படுத்தும். ஒரு கடனை அடைக்க, மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம். இக்காலத்தில் முறையான வழிபாடு உங்களுக்குத் தேவை.

    சுக்ரன் நீச்சம்

    ஆவணி 10-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் சுக்ரன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் நீச்சம் பெறுவதால் தொழில் போட்டி அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் தேவைப்படும் நேரம் இது. எந்தக் காரியத்திலும் உடனடியாக முடிவெடுக்காமல், மறுபரி சீலனை செய்வது நல்லது.

    நடக்கும் தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வது பற்றியோ, கூட்டாளிகளை இணைத்துக் கொள்வது பற்றியோ ஆலோசனை செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் 'விருப்ப ஓய்வில் வெளிவரலாமா?' என்று சிந்திப்பர். ஒரு சிலர் விலை உயர்ந்த பொருட்களை விற்க நேரிடும்.

    மிதுன - செவ்வாய்

    ஆவணி 10-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் போது, புதிய திருப்பங்கள் பலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பயணங்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் ஒற்றுமையோடு செயல்பட்டு, பாகப்பிரிவினைக்கு முன்வருவர். பூமி விற்பனையால் லாபம் உண்டு. புதியவர்களின் நெருக்கம் பொருளாதாரத்தை விருத்தி செய்து கொடுக்கும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 15-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது, அற்புதமான நேரமாகும். செல்வநிலையும், செல்வாக்கும் உயரும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும்.

    உங்களை உதாசீனப்படுத்தியவர்கள், ஓடி வந்து உங்களிடம் இணைந்து கொள்வர். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடித்து, தேவையான காரியங்களை சாதித்துக்கொள்வர்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் நட்பால் மேன்மை உண்டு. கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவி களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி உண்டு. பெண்களுக்கு உறவினர்களால் நன்மை கிடைக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 24, 25, 29, 30, செப்டம்பர்: 5, 6, 9, 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    சிம்மம்

    ஆடி மாத ராசிபலன்

    எதிர்நீச்சல் போட்டு முன்னேறிக் காட்டும் சிம்ம ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே எதிர்பாராத விரயங்கள் உண்டு. 10-ல் குரு பகவான் இருப்பதால் பதவி மாற்றமும், இடமாற்றமும் வரலாம். கண்டகச் சனியின் ஆதிக்கம் வலிமை இழப்பதால் கொண்டாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கலில் கவனம் தேவை. கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுக்க வேண்டுமானால், கொஞ்சம் வளைந்து கொடுத்துச் செல்வது நல்லது.

    குரு - செவ்வாய் சேர்க்கை

    மாதத் தொடக்கத்திலேயே குருவும், செவ்வாயும் இணைந்து, தொழில் ஸ்தானத்தில சஞ்சரிக்கிறார்கள். இது நன்மைதான். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள் கவுரவிக்கப்படுவர். கட்டிடப் பணி தொடரும். நீங்கள் தேர்ந் தெடுத்த களம் எதுவாக இருந்தாலும், அதில் வெற்றியைப் பெறுவீர்கள். இடம் வாங்கும் யோகம் உண்டு. தொல்லை கொடுத்து வந்த தொழிலாளர்கள், இப்பொழுது மனம் மாறுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    புதன்- வக்ரம்

    கடக ராசியில் சஞ்சரிக்கும் புதன், ஆடி 5-ந் தேதி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு, 12-க்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். விரயங்கள் குறையும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் விரும்பியபடி அமையும். சகோதரர்களால் ஒரு சில பிரச்சினையை சந்திக்க நேரிடும். வெளிநாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்பு களில் தாமதம் ஏற்படலாம். உங்களுக்கோ, உங்களுடன் இருப்பவர்களுக்கோ ஆரோக்கியம் சீராக, ஒரு தொகையைச் செலவிடும் சூழல் உருவாகும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆடி 16-ந் தேதி, உங்கள் ராசிக்கு சுக்ரன் வருகிறார். எனவே தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசியைப் பொறுத்தவரை சகாய ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். எனவே புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்விக்கும். தொழிலை விரிவு செய்வதற்காக, கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்துகொள்வீர்கள். தொழில் துறையில் இருப்பவர் களுக்கு பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகம் உண்டு. பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டு, புதிய ஆபரணங்கள் வாங்குவதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி உண்டு. வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு, அதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் நன்மை கிடைக்கும். கலைஞர்களுக்கு முன்னேற்றப் பாதை வழிகாட்டும். மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்குத் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். தனவரவு திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூலை: 17, 18, 28, 29, ஆகஸ்டு: 2, 3, 14, 15.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    சிம்மம்

    ஆனி மாத ராசிபலன்

    நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று விரும்பும் சிம்ம ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சூரியன், விரய ஸ்தானத்தில் தன - லாபாதிபதி புதனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அவர்களுடன் சுக்ரனும் இணைந்திருக்கிறார். இதனால் 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. கண்டகச் சனியின் ஆதிக்கம் ஒருபுறம் இருந்தாலும் கிரக நிலைகள் கொஞ்சம் சாதகமாக இருப்பதால், இந்த மாதம் தொழில் வளர்ச்சியும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது.

    சனி வக்ரம்

    ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். கண்டகச் சனி வக்ரம் பெறுவது நன்மைதான். உடல்நலத்தில் இருந்த பாதிப்புகள் மாற்று மருத்துவத்தால் குணமாகும். அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி என்பதால், உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல்கள் கிடைக்கும். சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கள் கிடைப்பதோடு ஆதாயம் தரும் தகவலும் கிடைக்கும். அதே நேரத்தில் களத்திர ஸ்தானாதிபதியாகவும் சனி விளங்குவதால் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

    கடக - புதன்

    ஆனி 12-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். தன - லாபாதிபதியான புதன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, தன விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக சில காரியங்கள் நடைபெறலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. மருத்துவச்செலவுகள் கூடும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டும் என்று விரும்புபவர்கள் அங்கு சென்றும் வேலை கிடைக்காமல் திரும்ப நேரிடும். எதையும் முன்யோசனையோடு செய்வதே நல்லது. கல்யாண முயற்சிகளும் கொஞ்சம் தாமதப்படலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழல் உருவாகும்.

    கடக - சுக்ரன்

    ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, தொழிலில் திடீர் விரயங்கள் ஏற்படலாம். பங்குதாரர்களின் அச்சுறுத்தல் அதிகரிக்கும். பயணங்கள் பலன் தருவதாக அமையாது. உறவினர்களின் பகையை வளராமல் பார்த்துக் கொள்வது நல்லது. வாகன வழியில் பழுதுச் செலவுகள் ஏற்படலாம். அரசியல் மற்றும் பொது நலத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து நிர்பந்தம் அதிகரிக்கும்.

    ரிஷப - செவ்வாய்

    ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 10-ம் இடத்திற்கு வருகையில், தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். வாடகை கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கேட்ட சலுகைகளை வழங்க, உயர் அதிகாரிகள் சம்மதம் தெரிவிப்பர்.

    பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு. கலைஞர் களுக்கு கவுரவம், புகழ் கூடும். மாணவ - மாணவி களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வருமானம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜூன்: 15, 16, 19, 20, 21, ஜூலை: 1, 2, 5, 6, 12, 13.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    சிம்மம்

    வைகாசி மாத ராசிபலன்

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு குருவும் இணைந்திருக்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தீட்டிய திட்டங்கள் நிறைவேறும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். குருவின் பார்வை, தன ஸ்தானத்தில் பதிவதால் பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும்.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். தொழில் ஸ்தானாதிபதி சுக்ரன், தொழில் ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். தொழில் வெற்றி நடைபோடும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 'வாடகைக் கட்டிடத்தில் இயங்கும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றலாமா?' என்று யோசிப்பீர்கள். பொருளாதார நிலை உயர்ந்திருப்பதால், குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும், ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியானவர் புதன். அவர் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளர்ச்சி திருப்தி தரும். கிளைத் தொழில் தொடங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்கு நிறைவு தரும் விதத்தில் நல்ல ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடந்து வெற்றி பெற்றதன் விளைவாக, பலரும் உங்களைப் பாராட்டுவார்கள். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி, எடுத்த முயற்சி யிலும் அனுகூலம் கிடைக்கும்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் தன் சொந்த வீட்டில் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். எதை எந்த நேரம் நீங்கள் செய்ய நினைத்தாலும், அதை அந்த நேரம் செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சி கள் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தென்படும். சொத்துக்கள் வாங்கவும், விற்கவும் உகந்த நேரம் இது.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு தன - லாபாதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, தொட்டது துலங்கும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்களிடையே உங்கள் மதிப்பு உயரும். வெற்றி வாய்ப்பு கள் வீடு தேடி வரும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு, நல்ல பொறுப்புகள் வந்து சேரும்.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்பொழுது எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வருமானம் உயரும். வியாபாரம் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்துமுடித்து வெற்றி காண்பீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்கள், ஓய்வில்லாத உழைப்பின் காரணமாக உன்னதமான நிலையை எட்டிப் பிடிப்பீர்கள். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டு வந்துசேரும். கலைஞர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப்பெறும். மாணவ - மாணவிகளுக்கு எதிர்பார்த்த இலக்கை அடைய வழிபிறக்கும். பெண்களுக்கு வரவு செலவுகள் திருப்தி தரும். வரன்கள் வந்து மகிழ்விக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 18, 19, 23, 24, 25, ஜூன்: 3, 4, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    சிம்மம்

    பங்குனி மாத ராசிபலன்

    எந்தக் காரியத்தையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் சிம்ம ராசி நேயர்களே!

    பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு ராகுவும் இணைந்திருக்கிறார். தன ஸ்தானத்தில் கேது இருப்பதால், வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே, அடுத்த தொகை உங்கள் கரங்களுக்கு கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்களில் தடைகளும், தாமதங்களும் உருவாகி, மன உளைச்சலைத் தரலாம். திறமைமிக்கவர்கள் அருகில் இருந்தும் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள இயலாது. கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் குறுக்கீடுகள் ஏற்படும். எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நேரம் இது.

    செவ்வாய் - சனி சேர்க்கை

    மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், மாதம் முழுவதும் அங்குள்ள சனியோடு சேர்ந்து சஞ்சாரம் செய்கிறார். இந்த முரண்பாடான கிரகச் சேர்க்கையின் விளைவாக, எண்ணற்ற பிரச்சினைகள் இல்லம் தேடி வரலாம். செவ்வாய், உங்கள் ராசிக்கு யோககாரகன் ஆவார். அவர் சப்தமாதிபதி சனியோடு இணையும்போது குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கலில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு, மருத்துவச் செலவு களால் விரயங்கள் ஏற்படும். அரசு வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கட்டிய வீட்டாலும் பிரச்சினை, கடன் சுமையாலும் தொல்லை என்ற நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    புதன் வக்ரம்

    பங்குனி 13-ந் தேதி, மீனத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங் களுக்கு அதிபதியானவர் புதன். தன - லாபாதிபதியான புதன் நீச்சமும், வக்ரமும் பெற்று சஞ்சரிக்கும் இந்த வேளையில், பொருளாதாரத்தில் மிகுந்த தட்டுப்பாடு ஏற்படும். 'வாங்கியதை கொடுக்க முடியவில்லை, கொடுத்ததை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உறவினர் பகை அதிகரிக்கும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்கள், வீண்பழிக்கு ஆளாகும் நிலை உருவாகும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக அமையும் நேரம் இது. குடும்பச் செலவு கூடும் காரணத்தால், கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

    மீனம் - சுக்ரன்

    பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன் உச்ச வீடான மீன ராசிக்குச் செல்கிறார். அங்கு புதனோடு சேர்ந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். அதே நேரம் 'நீச்ச பங்க ராஜயோகம்' ஏற்படுவதால் படிப்படியாக நல்ல பலன்கள் நடைபெறும். பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். தொழில், உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். நல்ல மனிதர்களின் நட்பால் புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கல்யாண வாய்ப்பு கைகூடும். அசையாச் சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. பழுதான வாகனத்தைக் கொடுத்துவிட்டு, புதிய வாகனம் வாங்கிப் பயணிக்கும் எண்ணம் நிறைவேறும்.

    ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடகு வைத்த நகைகளை மீட்கும் நிலை உருவாகும்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக பாராட்டு கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச் சுமை கூடினாலும், அதற்கேற்ற விதத்தில் ஊதியம் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். மாணவ - மாணவிகளுக்கு பாராட்டும், புகழும் உண்டாகும். பெண்களுக்கு திரு மணத்தடை அகலும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    மார்ச்: 14, 15, 18, 19, 25, 26, 29, 30, ஏப்ரல்: 10, 11.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    சிம்மம்

    மாசிமாத ராசிபலன்

    காரியத்தை கனகச்சிதமாக முடிக்கும் சிம்ம ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசி நாதன் சூரியன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு தன-லாபாதிபதி புதனும் இருக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. எனவே தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. பண வரவும் திருப்தி தரும். கெட்டி மேளம் கொட்டும் சூழ் நிலையும் உருவாகும். கண்டகச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் உடல் நலத்தில் கவனம் தேவை.

    கும்பம்-புதன்

    மாதத் தொடக்க நாளிலேயே, கும்ப ராசிக்கு புதன் செல்கிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து `புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி, கலைத்துறை சம்பந்தமாக எடுத்த முயற்சிகளிலும் அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் மேல்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் இருந்த தடை அகலும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த புது முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கள நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவீர்கள். திடீர் தனவரவு உண்டு.

    மகரம்-சுக்ரன்

    மாதத்தின் தொடக்க நாளிலேயே, மகரத்திற்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் யோககாரகன் செவ்வாயோடு இணைந்து சஞ்சரிக்கும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறப்புகளின் திருமணங்களை முன் நின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்பு கள் கிடைக்கும். அரசியல் களத்தில் உள்ளவர்களுக்கு மேலிடத்து ஆதரவு திருப்தி தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம்.

    மீனம்-புதன்

    மார்ச்-2-ந் தேதி, மீன ராசிக்குச் செல்லும் புதன் அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு தன-லாபாதிபதியான புதன் நீச்சம் பெறுவதால் வருமான பற்றாக்குறை ஏற்படும். திட்டமிட்ட காரியங்களை செய்வதில் சில தடுமாற்றங்களை சந்திப்பீர்கள். இருப்பினும் குரு பார்வை இருப்பதால் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடி விடும். உறவினர் பகை அதிகரிக்கும். உடல்நலம் கருதி ஒரு தொகையைச் செலவிட நேரிடும்.

    கும்பம்-சுக்ரன்

    மார்ச் 8-ந் தேதி, கும்ப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் ராசிநாதனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் யோகமான நேரம் தான். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். உடன் பிறப்பு களின் ஒத்துழைப்போடு ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் வருமானமும் அதிகரிக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் தொழில் செய்பவர் களுக்கு கணிசமான லாபம் கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு எதிர்பார்த்த படி கிடைக்கும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி உண்டு. பெண்களுக்கு கரைந்த சேமிப்பு களை ஈடுகட்ட புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 15, 16, 20, 21, 28, 29,

    மார்ச்: 2, 3.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    சிம்மம்

    தை மாத ராசிபலன்

    எந்த சூழ்நிலையிலும் கொள்கையை மாற்றிக்கொள்ளாத சிம்ம ராசி நேயர்களே!

    தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகின்றார். உங்கள் ராசியை குரு பகவான் பார்க்கின்றார். பலம் பெற்ற குருவின் பார்வை என்பதால் நல்ல பலன்கள் நடைபெற வேண்டும். ஆனால் கண்டகச் சனியின் ஆதிக்கம் இருக்கின்றது. எனவே இடையிடையே தாக்குதல்களும், தடைகளும் வரத்தான் செய்யும். அவற்றை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் கவலைப்பட வேண்டாம். ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை செலுத்துவது நல்லது.

    மே-குருவின் சஞ்சாரம்!

    மாதத் தொடக்கத்தில் மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். வக்ர நிவர்த்தியாகி பலம்பெற்று சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. 'குரு பார்க்கக் கோடி நன்மை' என்பதற்கேற்ப நினைத்த காரியங்கள் நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். தொழில் ரீதியாக வந்த இடையூறுகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக்கொடுப்பர்.

    தனுசு-சுக்ரன்!

    ஜனவரி 19-ந் தேதி தனுசு ராசிக்கு சுக்ரன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் நல்ல நேரம் தான். எனவே உடன்பிறப்பு கள் வழியில் ஒற்றுமை கூடும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். தொழில் ரீதியாகப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புனிதப் பயணங்களும் அதிகரிக்கும்.

    மகர-புதன்!

    ஜனவரி 27-ந் தேதி மகர ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் ராசிநாதன் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கும் இந்த நேரம், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசு வழி ஆதரவு உண்டு. வேலைக்காக நீங்கள் எடுத்த முயற்சி பலன் தரும். தற்காலிகப்பணி ஒரு சிலருக்கு நிரந்தரப் பணியாக மாறலாம். பிறரை சார்ந்திருப்பவர்கள் தனித்து இயங்க எடுத்த முயற்சி வெற்றிபெறும்.

    மகர-செவ்வாய் சஞ்சாரம்!

    பிப்ரவரி 4-ந் தேதி மகர ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அது செவ்வாய்க்கு உச்ச வீடாகும். உங்கள் ராசி நாதன் சூரியனோடு யோககாரகன் செவ்வாய் இணைவதால் இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். காரியங்கள் துரிதமாக நடைபெறும். 'கவலை' என்ற மூன்றெழுத்து உங்கள் அகராதியை விட்டு அகலப்போகின்றது. இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். இல்லம் தேடி சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்திற்கு வித்திடும் நேரமிது.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்குப் புதிய கூட்டாளிகளால் பொருளாதாரநிலை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமை பளிச்சிடும். மாணவ-மாணவி யர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஜனவரி: 19, 20, 24, 25, 31, பிப்ரவரி: 1, 3, 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    சிம்மம்

    மார்கழி மாத ராசிபலன்

    வேகமும் விவேகமும் கொண்டு செயல்படும் சிம்ம ராசி நேயர்களே!

    மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதுவும் குரு வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் லாபம் உண்டு. ஆனால் இம்மாதம் கண்டகச் சனியின் ஆதிக்கம் வருகிறது. எனவே மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையை செய்தாலும் இதைச் செய்வோமா, வேண்டாமா? என்ற இரட்டித்த சிந்தனை அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகையாலும் பிரச்சினைகள் உருவாகலாம். கவனம் தேவை.

    கும்ப ராசியில் சனி

    தொடர்ந்து மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான், மார்கழி 4-ந் தேதி கும்ப ராசிக்கு செல்கின்றார். வாக்கிய கணித ரீதியாக நடைபெறும் இந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கு ஏராளமான மாற்றங்களை வழங்கப்போகிறது. கண்டகச்சனியாக வருவதால் தொழில் போட்டிகள் அதிகரிக்கும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். வரவு வருவதற்கு முன்னரே செலவு காத்திருக்கும்.

    ஆரோக்கிய தொல்லைகள் அதிகரிக்கும். கண்டகச்சனியின் ஆதிக்கத்தால் உத்தியோக மாற்றமும், ஊர் மாற்றமும் உறுதியாகலாம். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தளரவிட வேண்டாம். சனிக்கவசம் பாடி சனி பகவானை தொடர்ந்து வழிபடுவதோடு, ஜாதகத்தில் சனியின் பலம் அறிந்து அதற்குரிய சிறப்பு வழிபாடுகளையும் மேற்கொண்டால் செல்வ விருத்தியில் தடை ஏற்படாது.

    விருச்சிக-சுக்ரன்

    மார்கழி 9-ந் தேதி விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு சுக்ரன் 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே இக்காலம் ஒரு இனிய காலமாகவே அமையும். தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    தனுசு-செவ்வாய்

    தனுசு ராசியில் மார்கழி 11-ந் தேதி செவ்வாய் பெயர்ச்சியாகி செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளையே வழங்குவார். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் நன்மை ஏற்படும். அதிகார பலம் பெற்றவர்களின் நட்பால் சில பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். வீடு கட்டுவது, கட்டிய வீட்டை விலைக்கு வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும்.

    தனுசு-புதன்

    மார்கழி 23-ந் தேதி தனுசு ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது தனவரவு தாராளமாக வந்துசேரும். படுத்த படுக்கையாக படுக்கையில் கிடந்தவர்கள் கூட பம்பரமாக சுழன்று பணிபுரிய வாய்ப்புகள் கைகூடிவரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு தாமதப்பட்ட பொறுப்புகள் தாமாக வந்து சேரும்.

    வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு தடைகளை மீறி முன்னேற்றம் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலிடத்து நிர்ப்பந்தம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு எதையும் திட்டவட்டமாக முடிவெடுக்க இயலாது. மாணவ-மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு ஒரு பிரச்சினை முடிவடைந்தால் அடுத்த பிரச்சினை தலைதூக்கும். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    டிசம்பர்: 22, 23, 27, 28,

    ஜனவரி: 3, 4, 7, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    சிம்மம்

    கார்த்திகை மாத ராசிபலன்

    நினைத்ததை உடனே செய்ய விரும்பும் சிம்ம ராசி நேயர்களே!

    கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் தன லாபாதிபதியான புதனோடும், பாக்கியாதிபதியான செவ்வாயோடும் இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே இந்த மாதம் யோகமான மாதம்தான். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் லாபம் கிடைக்கும். அஷ்டமத்தில் ராகு சஞ்சரித்தாலும் குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் துரிதமாக நடைபெறும்.

    வக்ர குருவின் ஆதிக்கம்

    மாதம் முழுவதுமே மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. 8-க்கு அதிபதியான குரு வக்ரம் பெறுவது நன்மைதான் என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால் பூர்வீகச் சொத்துத் தகராறுகள் மீண்டும் தலைதூக்கும். பிரி வினையான சொத்துகள் திருப்தியாக இல்லையே என்று உடன்பிறப்புகள் பஞ்சாயத்தார்களை அணுகுவர்.

    உறவினர்களின் அனுசரிப்பு கொஞ்சம் குறையலாம். அதே நேரத்தில் அஷ்டமாதிபதி குரு என்பதால் எதிர்பாராத விதத்தில் மனநிறைவு தரக்கூடிய ஒருசில காரியங்களும் நடைபெறும். தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வழிவகுத்துக் கொள்வீர்கள்.

    துலாம்-சுக்ரன்

    உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சகாய ஸ்தானாதிபதியான சுக்ரன் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். எனவே ஆரம்பத்தில் சில விஷயங்கள் அச்சுறுத்தலாகத் தோன்றலாம். சில காரியங்கள் முடியாமல் இழுபறி நிலையில் இருக்கலாம். ஆனால் கார்த்திகை 14-ம் தேதி சுக்ரன் துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகி வந்த பின்னால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே மாதத்தின் பிற் பகுதியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் ஏராளமாக வரலாம். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    தனுசு- புதன்

    உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங் களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து விதமான யோகங்களும் நன்மைகளும் கிடைக்கும் நேரமிது.

    குறிப்பாக பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்து சேரும். சேமிப்ப உயரும். செயல்பாடுகளில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அயல்நாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வரலாம்.

    சிம்மம்

    ஐப்பசி மாத ராசிபலன்

    18.10.2023 முதல் 16.11.2023 வரை

    நல்ல காரியங்கள் செய்வதை குறிக்கோளாகக் கொண்ட சிம்ம ராசி நேயர்களே!

    ஐப்பசி மாத கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இம்மாதம் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று குருவால் பார்க்கப்படுகின்றார். எனவே 'நீச்ச பங்க ராஜயோக' அடிப்படையில் கிரக பலன்கள் வந்து சேரும். எனவே எந்தக் காரியமும் முதல் முயற்சியில் வெற்றி அடையா விட்டாலும், அடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையும், ஆன்மிகப் பெரியவர்களின் அறிவுரையும் கைகொடுக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடி உண்டு.

    சனி வக்ர நிவர்த்தி!

    ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு 6, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் வக்ர நிவர்த்தியாகிப் பலம் பெறுவதால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தில் குழப்பங்கள் கூடுதலாக இருக்கும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட இயலாது. கடன் சுமை கூடிக்கொண்டே போகின்றதே என்று கவலைப்படுவீர்கள். இட மாற்றங்களும், வீடு மாற்றங்களும் இனிமை தரலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது.

    குரு வக்ரம்!

    மாதம் முழுவதும் குரு பகவான் மேஷ ராசியில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் பொழுது நன்மை தீமை இரண்டும் கலந்தே இருக்கும். குறிப்பாக அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான் என்றாலும், பஞ்சமாதிபதியாகவும் குரு விளங்குவதால் பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்கள் மேற்பார்வையிலேயே பிள்ளைகளை வைத்துக் கொள்வது நல்லது. பூர்வீக சொத்துத் தகராறுகள் மீண்டும் தலை தூக்கலாம். சந்தர்ப்பங்கள் சாதகமாக அமைய குருவை வழிபடுவது நல்லது.

    நீச்சம் பெறும் சுக்ரன்!

    ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை இழந்து நீச்சம் பெறுகின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் நீச்சம் பெறும்பொழுது தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறும் சூழ்நிலை உண்டு. உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றம் ஏற்படலாம். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் வரலாம்.

    விருச்சிக புதன்!

    ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். தன லாபாதிபதி சுக ஸ்தானத்திற்கு வரும்பொழுது தனவரவு திருப்தி தரும். சுகங்களும், சந்தோஷங்களும் கூடும். குறுக்கீடு சக்திகள் அகலும். நெருக்கடி நிலை மாறும். நேசிப்பவர்களின் எண்ணிக்கை உயரும். வாகன யோகம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் பணிக்கு பாராட்டு கிடைக்கும்.

    பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு லாபம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மாணவ-மாணவியர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்: அக்டோபர் 18, 19, 29, 30, நவம்பர் 9, 10, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: ஆனந்தா நீலம்.

    ×