மகரம் - வார பலன்கள்

இந்தவார ராசிபலன்

Published On 2024-01-15 02:20 GMT   |   Update On 2024-01-15 02:21 GMT

15.1.2024 முதல் 21.1.2024 வரை

விபரீத ராஜயோகம் உண்டாகும் வாரம். அஷ்டம ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் திட்ட மிட்டு செயல்பட பணம், புகழ், அந்தஸ்து போன்ற நியாயமான ஆசைகள் அனைத்தும் ஈடேறும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு நீங்கும். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தில் நிலவிய மனக்கசப்பு மாறும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு என்று எல்லாவிதமான நன்மைகளையும் அடைவீர்கள். இரண்டாம் திருமணத்தால் எற்பட்ட மனச் சங்கடங்கள் சீராகும். வயோதிகர்களின் ஆயுள், ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு நீங்கும். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும். வராக்கடன் வசூலாகும். அஷ்டமாதிபதி சூரியன் ராசியில் நிற்பதால் பண விசயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. முக்கிய பணிகளில் தடை தாமதம் ஏற்படலாம். நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். குல தெய்வத்தை வழிபடவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News