search icon
என் மலர்tooltip icon

    மகரம் - வார பலன்கள்

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    22.4.2024 முதல் 28.4.2024 வரை

    பல்வேறு விதமான வளமான பலன்கள் சித்திக்கும் வாரம் .இந்த வாரத்தில் சுக்ரன், செவ்வாய் பெயர்ச்சி நிகழப் போகிறது. புதன் வக்ர நிவர்த்தி என முக்கிய கிரகங்களின் சஞ்சாரத்தில் மாற்றம் உள்ளது.இது மகர ராசிக்கு சாதகமான கிரக மாற்றம் தான். நினைத்தவற்றை உங்கள் முயற்சியால் சாதிப்பீர்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தோடு செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். அத்தியாவசிய தேவைக்கு தடுமாறிய நிலை மறையும். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அரசு வகை ஆதாயம் கிடைக்கும். திறமையை நிருபிக்க நல்ல சந்தர்ப்பங்கள் தானாக கூடி வரும். பணி நிரந்தரமாகும்.

    புதிய வீடு, வாகனம் வாங்குதலில் நாட்டம் அதிகரிக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம். உடல் உஷ்ணம் மற்றும் கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். மனைவி வழி சொத்தில் நிலவிய கருத்து வேறுபாடு, பகைமை மறைந்து முழு பங்கும் கிடைக்கும்.கணவன், மனைவியிடம் ஒற்றுமை பாதிக்காது. சித்ரா பவுர்ண மியன்று அவல் பாயாசம் படைத்து மகாலஷ்மியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    15.4.2024 முதல் 21.4.2024 வரை

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். 5,10-ம் அதிபதி சுக்ரன் உப ஜெய ஸ்தானமான 3ம் மிடத்தில் உச்சம் பெறுவது மிக முன்னேற்றமான அமைப்பாகும். விருப்பங்கள், எண்ணங்கள் லட்சியங்கள் நிறைவேறும். எதையும் எதிர்கொள்ளும் தைரியம் கூடும்.

    தொழில் துவங்கி நிலைத்து நிற்க முடியாமல் தவித்தவர்களின் திறமையை வெளிப்ப டுத்த உகந்த கால மாகும். பிள்ளைகள், வாழ்க்கைத் துணை மற்றும் உறவுகளுடன் ஆடம்பர விழாக்கள், விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். 5, 10-ம் அதிபதி சுக்ரன் ராசிக்கு 3-ல் ராகுவுடன் இருப்பதால் தவறான சொத்து அல்லது பயன்படாத சொத்தை கட்டிக்காத்து ஏமாறுவீர்கள்.

    18.4.2024 அன்று காலை 7.56 முதல் 20.4.2024 அன்று இரவு 8.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பணப் பரிவர்த்தனை செய்வதை தவிர்க்கவும். மேஷத்தை சூரியன் கடக்கும் வரை கிருஷ்ணர் வழிபாடு அவசியம்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    8.4.2024 முதல் 14.4.2024 வரை

    நம்பிக்கை அதிகரிக்கும் வாரம். 5, 10-ம் அதிபதி சுக்ரன் உச்சம். தள்ளிப் போன காரியங்கள் எளிதில் முடியும். விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தாய், தந்தையின் அன்பு, அனுசரனை கிடைக்கும். பெற்றோர்கள் உங்களின் உணர்வுகளை புரிந்துகொள்வார்கள். குடும்பத்தில் உங்களின் ஆலோ சனைக்கு மதிப்பு உண்டாகும். வியாபாரத்தில் போட்டி களை சமாளிப்பீர்கள். திறமைக்கும், தகுதிக்கும். தகுந்த உத்தியோகம் கிடைக்கும். நில, புலன் வாங்கலாம். ஆடை, ஆபரணங்கள், சொத்து, சுகம் கால்நடை பாக்கியங்கள் கிடைக்கும். திருமணம், குழந்தை போன்ற முக்கிய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 6,9-ம் அதிபதி புதன் வக்ரம் பெறுவதால் கடன் தொல்லை குறையும். மீள முடியாத நோய் தாக்கத்தால் அவதிப்பட்டவர்களுக்கு நோயின் தன்மை புரியும்.

    வைத்தியச் செலவு செய்து மனம் நொந்தவர்கள் நோயில் இருந்து விடுபடுவர். 3-ல் ராகு அஷ்டமாதிபதி சூரியனுடன் நிற்பதால் சிலருக்கு மாமனாருடன் ஒதுங்கி இருந்தால் மன பேதம் ஏற்படாது. பயனற்ற செலவுகளை குறைக்கவும்..திடீர் பயணங்கள் ஏற்படும். கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும்.காரிய சித்திக்கு அஷ்டபுஜ துர்க்கையை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    1.4.2024 முதல் 7.4.2024 வரை

    தொழிலில் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி, தொழில் ஸ்தான அதிபதி சுக்ரன் ராசிக்கு 3-ல் உச்சம் பெற்று அஷ்டமாதிபதி சூரியனுடன் சேர்க்கை இருப்பதால் கவுர வத்திற்காக தொழில் நடத்த நேரும். தொழில் சீராக நடந்தாலும் லாபம் நிற்காது. கூட்டம் களைகட்டும் கல்லா களை கட்டாது. நம்பிய வேலையாட்களால் சில அசவுகரியங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை கடைபிடிப்பது அவசியம். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் நிதானத்தை கடைபிடிக்கவும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்குகளை ஒத்தி வைப்பது நல்லது. தேவையற்ற வாக்கு வாதங்கள் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

    திருமண முயற்சி கைகூடும்.மறுமணத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு தேர்தல் கால கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். திரைக் கலைஞர்களுக்கு கோட்சார கிரகங்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கி நல்ல சுப பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்வுகள் நடக்கும். தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். பெரிய உடல் உபா தைகள் அறுவை சிகிச்சையில் சீராகும். தினமும் ஸ்ரீ நடராஜரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    25.3.2024 முதல் 31.3.2024 வரை

    அமர்களமான வாரம். 5, 10-ம் அதிபதி சுக்ரன் உச்சம். மகரத்திற்கு இது மிக யோகமான காலம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் அஷ்ட மாதிபதி சூரியன் மற்றும் ராகு வுடன் சேருவதால் அதிர்ஷ்டமும் சில அசவுகரியமும் ஏற்படலாம். இதுவரை கர்மம் செய்ய புத்திரன் இல்லை என ஏங்கியவர்களுக்கு வாரிசு உருவாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குல தெய்வ கடாட்சத்தால் சீராகும். இது வரை குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் தெரியவரும். பூர்வீகம், பூர்வீகச் சொத்து தொடர்பான மன உளைச்சல் அகலும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். அவர்களால் ஏற்பட்ட மனக் கஷ்டம் தீரும். அரசாங்க ஊழியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு இது ராஜயோக நேரம்.

    தேர்தலில் நிற்கும் மகர ராசி அரசியல் வாதிகளுக்கு அமோக வெற்றி உறுதி. பதவி நிச்சயம். தாய், தந்தை, வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத உதவிகள் மற்றும் பணவரவு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வயது முதிர்ந்தவர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதை கள் கட்டுக்குள் இருக்கும். காதல் திருமணம் வெற்றி யடையும். சிலருக்கு வம்பு, வழக்கு உருவாகலாம். கிருஷ்ணரை வழிபட இன்னல்கள் விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    18.3.2024 முதல் 24.3.2024 வரை

    கலக்கலான வாரம். தன ஸ்தானத்தில் சனி, செவ்வாய், சுக்ரன் சேருவது மகர ராசிக்கு அபூர்வ மான ஆரவாரமான கலக்கலான கிரகச்சேர்க்கை. அடுத்த முறை செவ்வாய் கும்பத்திற்குள் சனியுடன் சேர 30 வருட காலமாகும். செவ்வாய், சனியும் சேர்ந்தாலே ஆபத்து, அசுப கிரகச் சேர்க்கை என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே எல்லோரும் பார்க்கிறார்கள். மகரத்திற்கு சனி ராசி மற்றும் தன ஸ்தான அதிபதி. செவ்வாய் சுக அதிபதி, லாப அதிபதி. தன அதிபதி, சேர்க்கை என்பதால் இது மகரத்திற்கு பல மடங்கு நன்மை தரும் கிரக அமைப்பு. இது அபரிமிதமான சொத்து சேர்க்கை, தன வரவை ஏற்படுத்தும் மகத்தான கிரகச் சேர்க்கை. தன வரவின் அளவை அளவிட முடியாது. இதுவரை சொத்து இல்லாதவர்களுக்கு புதிய சொத்து சேரும்.

    பழைய சொத்துக்களின் மதிப்பு அதிகரிக்கும். வாடகை வருமானம் தரும் சொத்துக்கள் சேரும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். சகோதரர்களால் சகாயமான பலன் உண்டாகும். சுபகாரியம் நடக்கும். 22.3.2024 அன்று காலை 1.27 மணி முதல் 24.3.2024 மதியம் 2.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகள்நண்பர்களிடம் அமைதிப் போக்கினை கையாள்வது நல்லது. நாளும், கோளும் நன்மை தர தினமும் மாலை வேளையில் நவகிரகங்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    11.3.2024 முதல் 17.3.2024 வரை

    சாதகமான வாரம். 2-ம் இடத்தில் சனி, செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் பெரிய சொத்துப் பிரச்சினையில் மாட்டியவர்கள் அதிர்ஷ்ட வசமாக தப்பிப்பார்கள். குடும்ப உறுப்பினர்களிடையே புரிதல் உண்டாகும். செவ்வாய் கும்பத்தை கடக்கும் வரை வீண் வாக்குவாதங்கள், விவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. அதுதான் எல்லா பிரச்சினை களுக்கும் அருமருந்து. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் கடனாக கொடுத்த பணம் இந்த வாரத்தில் வசூலாகும்.

    மகளின் திருமணத்திற்கு பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். அலுவலகத்தில் வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பு, பணிகளை முடிக்க சக ஊழியர்கள் உதவுவார்கள். வணிகர்களுக்கு இந்த வாரம் வழக்கத்தை விட அதிகமாக வியாபாரம் நடக்கும். அதிக லாபங்களால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். சிலர் பிள்ளைப் பேறுக்காக வைத்தியம் செய்வார்கள். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கும்.கற்பக விநாயகரை வழிபட வளர்ச்சிகள் அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    4.3.2024 முதல் 10.3.2024 வரை

    கொள்கை பிடிப்போடு செயல்படும் வாரம். உச்சம் பெற்ற கேந்திராதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரனுடன் ராசியில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டமும் கவுரவப் பதவிகளும் தேடி வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும். நினைப்ப தொன்று, நடப்ப தொன்றுமாக இருந்த நிலை மாறும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். வாழ்க்கைத் தரம் உயரும்.

    அடமானத்தில் இருக்கும் வீட்டை மீட்க தேவையான பணம் கிடைக்கும். பணம் கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட சச்சரவுகள் அகலும்.மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பார்கள். திரைப்பட கலைஞர்கள் படப்பிடிப்பிற்கு வெளிநாடு செல்லும் சூழல் நிலவும். திருமண பேச்சு வார்த்தை நல்ல முடிவிற்கு வரும். பித்தம், வாதம், அலர்ஜி போன்ற சிறு சிறு உடல் பாதிப்பு தோன்றும். சிவனுக்கு சுத்த மான பசும்பாலால் அபிசேகம் செய்ய தடை, தாமதம் விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    26.2.2024 முதல் 3.3.2024 வரை

    தொட்டதெல்லாம் பொன்னாகும் வாரம் ராசியில் உச்ச செவ்வாய் சுக்ரன். தன ஸ்தானத்தில் சூரியன், சனி, புதன் என பல்வேறு கிரக நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இதுவரை உங்களுக்கு எது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து முன்னேற்றம் காண்பீர்கள். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். வசதியும், அந்தஸ்தும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு கிடைக்கும்.

    திரும ணத்தடை அகலும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். தம்பதிகள் மனம் விட்டு பேசுவதால் நன்மைகள் உண்டாகும். தாய் வழியில் ஏற்பட்ட மனக்கவலைகள், கருத்து வேறுபாடு அகலும். உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். செவ்வாய்க்கிழமை அரளிப்பூவால் முருகனை வழிபட முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டு.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    19.2.2024 முதல் 25.2.2024 வரை

    திட்டமிட்ட செயல்கள் பூர்த்தியாகும் வாரம். தனம், வாக்கு. குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி சேர்க்கை. இது மகர ராசிக்கு சுப பலனை பணவரவை, அதிர்ஷ்டத்தை, சுபிட்சத்தை அதிகப்படுத்தும் அமைப்பாகும். புதிய நம்பிக்கை பிறக்கும். தந்தை வழியில் உதவி, பூர்வீகச் சொத்து சம்பந்தமாக சாதகமான பலன்களை எதிர்பார்கலாம்.தொழில் வளம் சிறக்கும். கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுககு பதவி உயர்வு, ஊதிய உயர்வு,கூடுதல் பொறுப்புகள், வழங்கப்படும். சிலருக்கு குறுகிய கால இடமாற்றம் உருவாகும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வரவிற்கும், செலவிற்கும் சரியாக இருக்கும். உடல் உபாதைகள், நோய் தொந்தரவு மாற்று வைத்தியத்தில் பலன் தரும்.

    குழந்தை பேற்றில் நிலவிய குறைபாடுகள் சீராகி கரு தங்கும். 23.2.2024 அன்று மாலை 7.25 முதல் 26.2.2024 காலை 8.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள் என்பதால் பேச்சில் கவனம் தேவை. மாசி மகத்தன்று கரும்புச்சாறு அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    12.2.2024 முதல் 18.2.2024 வரை

    நன்மையும் தீமையும் கலந்த வாரம். ராசியில் 4,11-ம் அதிபதி செவ்வாய் உச்சம். தன ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியன் சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதகமாகவும் உள்ளதால் ஏற்ற இறக்கம் கலந்த பலனே நடக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறக்கும். கவனத்துடன் செயல் பட்டால் தொழில், உத்தியோகத்தில் வெற்றியடைய முடியும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் இயன்ற வரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். பெரிய மூலதனம் போடுவதற்கு ஏற்ற காலம் அல்ல.

    மகளின் திருமணத்திற்கு எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். உடன் பிறந்த வர்களின் சந்திப்பு, அனுசரனை மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தந்தை வழி சுற்றத்தால் நற்பயன் மற்றும் உதவி கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி யால் ஆதாயம் உண்டாகும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பீர்கள். தினமும் விநாயகர் அகவல் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மகரம்

    இந்தவார ராசிபலன்

    5.2.2024 முதல் 11.2.2024 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். 4, 11-ம் அதிபதி செவ்வாய் அஷ்டமாதிபதி சூரியன் மற்றும் 6,9ம் அதிபதி புதனும் ராசியில் சஞ்சாரம். இதையே மாற்றி பலன் கூறினால் ராசியில் அஷ்டமாதிபதி சூரியன், பாதகாதிபதி செவ்வாய், 6ம் அதிபதி புதன். இதுபோன்ற கூட்டு கிரகங்களால் சில அசவுகரியங்கள் ஏற்படலாம். அடுத்த வாரம் அதாவது மாசி பிறந்தவு டன் சூரியன் ராசியை விட்டு விலகிவிடுவார். அதுவரை சிந்தித்து செயல்பட வேண்டும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஏற்பட்ட மன சங்கடம் தீரும். பணி யில் கவுரவம் நிலைத்தி ருக்கும். திருமண முயற்சி கள் சித்திக்கும். சிலர் எதிர்பாராத இடமாற்றத் தால் குடும்பத்துடன் இணைவார்கள். இந்த காலகட்டத்தில் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும்.

    ஏழரைச் சனியின் காலம் என்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். சிறு உடல் உபாதைகள் தோன்ற லாம். குடும்ப உறவுகளிடம் சிறு சிறு கருத்து வேற்றுமை வரலாம். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். தை அமாவாசையன்று சாலையோரம் வசிப்ப வர்களுக்கு இயன்ற அன்ன தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×