ஆன்மிக களஞ்சியம்

சூரியனை தரிசனம் செய்தல்

Published On 2024-01-17 13:10 GMT   |   Update On 2024-01-17 13:10 GMT
  • இத்தரிசனம் அளப்பறிய சூரிய ஆற்றலை பெற்றுத்தரும்.
  • காலை சூரிய உதயமுதல் 8 மணி வரையிலும் சூரியனை வெறுங்கண்ணால் தரிசிக்கலாம்.

சூரியனை உதயகாலத்தில் வெறுங்கண்ணால் பார்த்து தரிசித்து சூரியனின் காயத்ரி, தியான மந்திரம், அஷ்டோத்ரம் ஆகியவற்றை சொல்லி வணங்க வேண்டும்.

உதயகால சூரியன் அதிக வெப்பமின்றி, ஒளிக்கதிர்கள் இன்று முழு வட்டவடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பார்.

இத்தரிசனம் அளப்பறிய சூரிய ஆற்றலை பெற்றுத்தரும்.

கண்களின் மூலம் சூரியனின் ஆற்றல் உடலுக்குள் சென்றடைகிறது. இதனால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

¥ ஆத்மபலம், ¥ மனபலம், ¥ தேகபலம், ¥ எதிர்ப்பு சக்தி,¥ நோய் நிவர்த்தி, ¥ எதையும் சந்திக்கும் மனதைரியம், ¥ ஆண்மை, வீரியம் அதிகரித்தல், ¥ அறிவாற்றல், நினைவாற்றல், ¥ சிந்தனாசக்தி அதிகரித்தல், ¥ நிர்வாகத்திறன் கூடுதல், ¥ மனத்தூய்மை, ¥ முகத்தில் தேஜஸ் (ஒளி), ¥ வசீகரம், ¥ பேச்சாற்றல், ¥ எதிலும் பெற்றிபெறும் மனநிலை, ¥ நம்மால் முடியும் என்ற நம்பிக்கை, ¥ தாழ்வு மனப்பான்மை விலகுதல், ¥ ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், ¥ எண்ணங்களுக்கு வலிரத உண்டாகும். ¥ சத்ருக்களை ஜெயித்தல், ¥ எத்தகைய பிரச்சினைகளில் இருந்தும் வெற்றி பெறுதல், ¥ கண்பார்வை சக்தி அதிகரித்தல், ¥ கண் நோய் நீங்குதல், ¥ படைப்பாற்றல் உண்டாகுதல்.

சூரியனின் ஆற்றல் முழுவதும் நம்முள் வந்துவிடும்! அப்புறம் என்ன வேண்டும்? நாமே சூரியன் தான்!!

தரிசன நேரம்:

காலை சூரிய உதயமுதல் 8 மணி வரையிலும் சூரியனை வெறுங்கண்ணால் தரிசிக்கலாம்.

மார்பளவு தண்ணீரில், ஏரி, குளம், ஆறுகளில் நின்று கொண்டு இருகைகூப்பி சூரியனை பார்த்து வெறுங்கண்ணால் தரிசிக்க வேண்டும்.

குறைந்தது 30 நிமிடங்கள் செய்ய வேண்டும்.

தரிசிக்கும்போது காயத்ரி, அஷ்டோத்ரம் சொல்லிக் கொண்டே தரிசித்து வணங்க வேண்டும்.

இதனால் உடலிலும், மனதிலும் எண்ணற்ற ஏற்றமான மாற்றங்கள் நிகழ்வதை கண்கூடாக உணரலாம்.

Tags:    

Similar News