செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் தாக்குதல்- 2 பேர் பலி, 14 பேர் காயம்

Published On 2019-06-04 10:36 GMT   |   Update On 2019-06-04 10:36 GMT
ஆப்கானிஸ்தானில் மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் உள்ள மசூதியில் இஸ்லாமியர்கள் இன்று ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்தவேளையில் மசூதி அருகே பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 செய்தியாளர்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தொழுகை முடித்து மக்கள் மசூதியை விட்டு வெளியே வரும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.



இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்க வில்லை. இதேபோல் கடந்த மாதம் பக்லான் மாகாணத்தில் உள்ள போலீஸ் அலுவலகத்தின்மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர், 20 பேர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் ரமலான் மாதத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News