செய்திகள்

முதல்தர போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய இலங்கை சுழற்பந்து வீச்சாளர்

Published On 2019-01-07 10:56 GMT   |   Update On 2019-01-07 10:56 GMT
இலங்கையில் நடைபெற்ற முதல்தர போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் மலிந்தா புஷ்பகுமாரா 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். #Cricket
இலங்கையில் நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில் கொழும்பு கிரிக்கெட் கிளப் - சராசென்ஸ் அணிகள் மோதின. இதில் கொழும்பு கிரிக்கெட் கிளப் அணி சராசென்ஸ் அணியின் வெற்றிக்கு 349 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

கொழும்பு கிரிக்கெட் கிளப் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மலிந்தா புஷ்பகுமாராவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சராசென்ஸ் அணி 113 ரன்னில் சுருண்டது. புஷ்பகுமாரா 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அசத்தினார். சராசென்ஸ் அணி 36.4 ஓவர்கள் எதிர்கொண்டது. இதில் புஷ்பகுமாரா 18.4 ஓவர்கள் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News