செய்திகள்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு

Published On 2019-06-07 06:40 GMT   |   Update On 2019-06-07 06:40 GMT
டெல்லியில் ஜூன் 15ல் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தா:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார்.  

இதனிடையே, நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.



இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப்போவதாக கூறி பிரதமர் மோடிக்கு மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மாநில திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க எந்தவித அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பயனில்லை என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News