செய்திகள்

தேனி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்த கொள்ளையர்

Published On 2019-05-23 10:21 GMT   |   Update On 2019-05-23 10:21 GMT
தேனி அருகே டாஸ்மாக் கடையில் புகுந்த கொள்ளையர்ளை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே சின்னமனூர் - சீப்பாலக்கோட்டை சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் சின்னமனூர், ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த அழகுமலை (வயது 44) என்பவர் மேற்பார்வையாளராக உள்ளார். வழக்கம் போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றுள்ளனர்.

நள்ளிரவு சமயத்தில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆனால் எந்த பொருட்களையும் எடுத்துச் செல்ல வில்லை.

மறுநாள் காலை கடைக்கு வந்த அழகுமலை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags:    

Similar News