செய்திகள்

திருமங்கலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பணம் கொள்ளை - வாலிபர் கைது

Published On 2018-12-18 10:32 GMT   |   Update On 2018-12-18 10:32 GMT
திருமங்கலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்:

திருமங்கலம் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேசுவரன் (வயது40). முன்னாள் தே.மு.தி.க. கவுன்சிலரான இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர் கல்லாபெட்டியில் இருந்த ரூ.40 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பினான்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய நபரை தேடி வந்தனர்.

தொடர் விசாரணையில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் திருடியது பெருங்குடி அண்ணாநகரைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் விக்கி என்ற விக்னேஷ்(26) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இவரை கைது செய்தனர்.

விக்னேஷ் மீது கொலை முயற்சி, வழிப்பறி, கொலை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடததக்கது.

Tags:    

Similar News