செய்திகள்

திருச்சியில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏசி இயந்திரம் பழுது - பயணம் ரத்து

Published On 2018-10-15 04:28 GMT   |   Update On 2018-10-15 04:28 GMT
திருச்சியில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் ஏசி இயந்திரம் பழுதடைந்ததால் கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டது. #JetAirways #FlightCancelled #TrichyAirport
திருச்சி:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை சிங்கப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் 115 பயணிகள் அமர்ந்திருந்தனர். புறப்படும் சமயத்தில், விமானத்தின் ஏசி எந்திரம் பழுதடைந்திருப்பதை விமானி கண்டறிந்தார்.



இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பயணம் ரத்து செய்யப்பட்டது.  பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உரிய நேரத்தில் பழுது கண்டறியப்பட்டதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இதேபோல் கடந்த மாதம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தினுள் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பயணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கேபின் காற்றழுத்தம் குறைந்ததால் சுமார் 30 பயணிகளுக்கு மூக்கிலும் காதிலும் ரத்தம் வழிந்தது. இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திரும்பி வந்து மும்பையில் தரையிறங்கியது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. #JetAirways #FlightCancelled #TrichyAirport

Tags:    

Similar News