செய்திகள்

தென்காசி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

Published On 2018-09-11 10:46 GMT   |   Update On 2018-09-11 10:46 GMT
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
தென்காசி:

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அங்குள்ள தோட்டத்தில் ராஜன் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி ஒருவர் சென்றார். அவரிடம் பேச்சு கொடுத்த ராஜன், சிறுமியை நைசாக தோட்டத்து மறைவிடத்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு அவர் சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்தார். அவரிடம் இருந்து சிறுமி தப்ப முயன்றார். ஆனால் ராஜன் விடாததால் சிறுமி அலறி கூச்சல் போட்டார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தம் வந்த இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த சிறுமி அழுது கொண்டே தன்னை பாலியல் பலாத்கார முயற்சி செய்ததாக கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற ராஜனை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அவரை அந்த பகுதியில் உள்ள ஆய்க்குடி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவருடன் ஏராளமான பொதுமக்களும் திரண்டு சென்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆய்க்குடி போலீசார் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட ராஜனையும், அவருடன் வந்தவர்களையும் தென்காசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பினர். மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ராஜன் மீது ‘போக்சோ’ சட்டத்திலும், தீண்டாமை ஒழிப்பு சட்டத்திலும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
Tags:    

Similar News