ஆன்மிகம்

பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2019-04-23 07:48 GMT   |   Update On 2019-04-23 07:48 GMT
சேத்தியாத்தோப்பு அருகே பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததையடுத்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் விக்னேஷ்வரபூஜை, வாஸ்துசாந்தி, யாகசாலை பூஜைகள், பிம்பசுத்தி, நாடிசந்தானம், ரக்‌ஷாபந்தனம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பிடாரி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விஜயகணேசர், அய்யனார், துர்க்கை அம்மன், அங்காளம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News