search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாலியில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி
    X

    மாலியில் வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலி

    மேற்கு ஆப்பரிக்க நாடான மாலியின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் பலியாகியுள்ளனர்.
    பமகோ:

    மாலி நாட்டின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகள், நிலங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. இந்த வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளை இழந்து மக்கள் முகாம்களில் தங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து இந்த வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற அந்நாட்டு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. போலீசார், மீட்பு பணியினர் ஓய்வின்றி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மாலியில் ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   
    Next Story
    ×