search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 3 பேர் பலி-  500 விமானங்கள் ரத்து
    X

    அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 3 பேர் பலி- 500 விமானங்கள் ரத்து

    அமெரிக்காவில் பனிப்புயல் வீசியதால் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் கடும் பனிப்புயலுக்கு 3 பேர் பலியாகினர். #Snowstorm #USWeather #FlightsCancelled
    சிகாகோ:

    அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் ரோடுகள் மற்றும் வீடுகள் மீது பனி கொட்டுகிறது. டகோடா, மின்னெசோட்டா, கன்சாஸ் மற்றும் அயோவா மாகாணங்களில் பனி கொட்டிக் கிடப்பதால் ரோடுகள் மூடப்பட்டுள்ளன.

    விமான நிலையங்களில் 8 முதல் 18 அங்குலம் அளவுக்கு பனி உறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5700 விமானங்கள் தாமதமாக வந்து சென்றன.


    கடும் பனிப்புயலுக்கு 3 பேர் பலியாகினர். லூசியானாவில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 58 வயது பெண் பலியானார். கன்சாசில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இவர் தவிர மேலும் ஒருவர் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Snowstorm #USWeather #FlightsCancelled
    Next Story
    ×