search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேபாளம் நாட்டின் சுற்றுலாத்துறை நல்லெண்ணத் தூதராக நடிகை ஜெயப்பிரதா நியமனம்
    X

    நேபாளம் நாட்டின் சுற்றுலாத்துறை நல்லெண்ணத் தூதராக நடிகை ஜெயப்பிரதா நியமனம்

    இந்தியாவின் அண்டைநாடான நேபாளம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் நல்லெண்ணத் தூதராக நடிகை ஜெயப்பிரதா 4 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். #JayaPrada #GoodwillAmbassador #Nepaltourism
    காத்மாண்டு:

    இந்தியாவின் அண்டைநாடான நேபாளத்தின் முக்கிய வருமானத்தில் சுற்றுலாத்துறை மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. வரும் 2020-ம் ஆண்டை ‘நேபாளத்தை காண வாருங்கள்’ என்னும் தலைப்புடன் சுற்றுலா ஆண்டாக அனுசரிக்க நேபாள அரசு தீர்மானித்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் வெளிநாட்டினர் தங்கள் நாட்டை காண வருமாறு ஈர்ப்பதில் அக்கறை காட்டி வருகிறது.

    இந்தியாவில் இருந்து மேலும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் தீர்மானித்துள்ள நேபாளம் அரசு அந்நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சாரம் துறையின் நல்லெண்ண தூதராக நடிகை ஜெயப்பிரதாவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பதவியில் அவர் 4 ஆண்டுகளுக்கு நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நியமனத்தின் மூலம் இந்தியா-நேபாளம்  இடையிலான மிகப்பழமையான நல்லுறவு பலப்படுவதுடன் நேபாளத்திற்கு வரும் இந்திய மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என நேபாளம் சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JayaPrada #GoodwillAmbassador #Nepaltourism
    Next Story
    ×