என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியா துணை பிரதமருடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
Byமாலை மலர்14 Sep 2018 11:59 AM GMT (Updated: 14 Sep 2018 11:59 AM GMT)
ரஷியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ரஷியா துணை பிரதமர் யூரி போரிசோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #SushmaSwaraj
மாஸ்கோ:
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். பயணத்தின் ஒருபகுதியாக ரஷியாவின் துணை பிரதமர் யூரி போரிசோவை அவர் மாஸ்கோவில் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் டுவிட்டரில் கூறுகையில், ரஷியா-இந்தியா நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு ஆணையத்தின் மாநாடு மாஸ்கோவில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷியா துணை பிரதமர் யூரி போரிசோவ் மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சுஷ்மா, இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரஷியா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலராகவும், ரஷியாவில் இந்தியா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது. இரண்டு நாடுகளும் இணைந்து 2025-ம் ஆண்டிற்குள் 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இப்போதே அந்த இலக்கை எட்டிவிட்டதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக
அவர் தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற துணை பிரதமர் யூரி போரிசோவுடனான சந்திப்பில், அனைத்து துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையேயான உறவை விரிவுபடுத்தி புதிய வாய்ப்புகளை கண்டறிவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர் என ராவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். #SushmaSwaraj
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். பயணத்தின் ஒருபகுதியாக ரஷியாவின் துணை பிரதமர் யூரி போரிசோவை அவர் மாஸ்கோவில் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் டுவிட்டரில் கூறுகையில், ரஷியா-இந்தியா நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார கூட்டுறவு ஆணையத்தின் மாநாடு மாஸ்கோவில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷியா துணை பிரதமர் யூரி போரிசோவ் மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய சுஷ்மா, இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு வரை ரஷியா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டாலராகவும், ரஷியாவில் இந்தியா செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு 13 பில்லியன் அமெரிக்க டாலராகவும் உள்ளது. இரண்டு நாடுகளும் இணைந்து 2025-ம் ஆண்டிற்குள் 30 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுக்கு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இப்போதே அந்த இலக்கை எட்டிவிட்டதை நினைத்து மகிழ்ச்சியடைவதாக
அவர் தெரிவித்தார்.
பின்னர் நடைபெற்ற துணை பிரதமர் யூரி போரிசோவுடனான சந்திப்பில், அனைத்து துறைகளிலும் இருநாடுகளுக்கு இடையேயான உறவை விரிவுபடுத்தி புதிய வாய்ப்புகளை கண்டறிவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர் என ராவீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார். #SushmaSwaraj
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X