என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உஸ்பெகிஸ்தான் பிரதமருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு
Byமாலை மலர்4 Aug 2018 3:56 PM GMT (Updated: 4 Aug 2018 3:56 PM GMT)
அரசுமுறை பயணமாக இன்று உஸ்பெகிஸ்தான் வந்த வெளியுறவுத்துறை மந்திரி பிரதமர் அப்துல்லா அரிப்போவ் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #SushmainUzbekistan
தாஷ்கென்ட்:
மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் நிறைவுகட்டமாக இன்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் அஜிஸ் காமிலோவ் மலர்கொத்து அளித்து அன்புடன் வரவேற்றார்.
இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை அபிவிருத்தி, சுற்றுலா, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் உயரதிகாரிகள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ்-ஐ சுஷ்மா சந்தித்து பேசினார்.
தாஷ்கென்ட் நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவகத்தில் அஞ்சலி செலுத்தும் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #SushmainUzbekistan #SushmametAbdullaAripov
மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின் நிறைவுகட்டமாக இன்று உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் வந்தடைந்த அவரை விமான நிலையத்தில் உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் அஜிஸ் காமிலோவ் மலர்கொத்து அளித்து அன்புடன் வரவேற்றார்.
இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை அபிவிருத்தி, சுற்றுலா, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் உயரதிகாரிகள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிப்போவ்-ஐ சுஷ்மா சந்தித்து பேசினார்.
தாஷ்கென்ட் நகரில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவகத்தில் அஞ்சலி செலுத்தும் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். #SushmaSwaraj #SushmainUzbekistan #SushmametAbdullaAripov
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X