search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வயதாகும் இந்திய வம்சாவளி சிறுவன் சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு
    X

    8 வயதாகும் இந்திய வம்சாவளி சிறுவன் சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு

    பிரிட்டனில் நடைபெற்ற யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுவன் இந்த ஆண்டுக்கான சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    லண்டன் :

    பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சிறுவன் ஈஸ்வர் சர்மா. 8 வயதான இவர் கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற 'உலக மாணவர்கள் விளையாட்டு 2018'-ல் வெற்றி பெற்று பிரிட்டனுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். மேலும், துருக்கியில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய யோகா சாம்பியன் போட்டிகளிலும் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.

    பிரிட்டனில் நடைபெற்ற 11 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய யோகா போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஈஸ்வர் சர்மா எனும் சிறுவன் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், பிர்மிங்கமில் நடைபெற்ற இளம் சாதனையாளர்களுக்கான 6-வது விருது வழங்கும் விழாவில், இந்த ஆண்டுக்கான பிரிட்டனின் சிறந்த இந்தியராக ஈஸ்வர் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய சிறுவன் ஈஸ்வர்,  ‘எனக்கு என்னையே போட்டியாளராக நினைத்துக்கொண்டு செயல்பட்டதால் எத்தகைய கடினமான ஆசனமாக இருந்தாலும் என்னை அதை எளிதில் செய்ய முடிந்தது’ என தெரிவித்தார்.



    பிரிட்டன் முழுதும் 100-க்கும் மேற்பட்ட யோகா போட்டிகளில் பங்கேற்றுள்ள ஈஸ்வர், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலியிலும், அடுத்த ஆண்டு பிய்ஜிங்கிலும் நடைபெற உள்ள யோகா போட்டிகளில் கலந்துகொள்ள தன்னை தயார் செய்யும் வகையில் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்.  
    Next Story
    ×