என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செக்ஸ் புகாரில் சிக்கிய பிரிட்டன் மந்திரி ராஜினாமா
Byமாலை மலர்15 July 2018 8:57 AM GMT (Updated: 15 July 2018 8:57 AM GMT)
பெண்களுக்கு ஆபாச மெஸேஜ்களை அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் நாட்டு சிறுவர்த்தகங்கள் துறை மந்திரி ஆன்ட்ரு கிரிபித்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். #AndrewGriffithsminister
லண்டன்:
பிரிட்டன் நாட்டு சிறுவர்த்தகங்கள் துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஆன்ட்ரு கிரிஃபித்ஸ். பர்டன் பாராளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இதற்கு முன்னதாக கடந்த 2004-2006 ஆண்டுவாக்கில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அவை முன்னவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், பிரபல சமூக ஊடகமான ‘ஸ்னாப்சாட்’டில் இரு பெண்களை பின்தொடர்ந்து வரும் ஆன்ட்ரு, அவர்கள் பதிவு செய்த சில கருத்துகளுக்கு எதிராக ஆபாச பதில்களை பதிவிட்டு வந்துள்ளார்.
அந்த பெண்களின் இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் கடந்த மூன்றுவார காலத்தில் சுமார் 2 ஆயிரம் கருத்துகளை ஆன்ட்ரு பதிவு செய்தார். இவற்றில் பெரும்பாலனவை பாலியல் நோக்கம் கொண்டதாகவும், ஆபாசமாகவும் இருந்ததால் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பிரதமர் தெரசா மேவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். #AndrewGriffithsminister
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X