search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்
    X

    கவுதமாலா எரிமலை வெடிப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 50 பேரை இழந்த பெண்

    கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியதில் பெண் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். #GautemalaVolcanoEruption #FeugoVolcano

    கவுதமாலா சிட்டி:

    கவுதமாலாவில் உள்ள ஃப்யூகோ எரிமலை கடந்த வாரம் வெடித்துச் சிதறியது. இதில் 110 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் எரிமலை சாம்பலில் சிக்கி யூஃபிமியா கார்சியா என்பவரின் உறவினர்கள் 50 பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. 

    50 வயதான கார்சியாவுடன் 9 பேர் பிறந்துள்ளனர். மூன்று தலைமுறை கண்ட கார்சியாவின் 75 வயது தாயும் இந்த எரிமலை வெடிப்பில் காணாமால் போயிருக்கிறார். பல நாட்களாகியும் என் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் என 50 பேரை காணவில்லை என கார்சியா கவலையுடன் கூறுகிறார். #GautemalaVolcanoEruption #FeugoVolcano
    Next Story
    ×