என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் கேபினட் மந்திரி ஆனார்
Byமாலை மலர்25 April 2018 12:10 AM GMT (Updated: 25 April 2018 12:10 AM GMT)
சிங்கப்பூரில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். #Singapore #IndraneeRajah
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் சீனர்.
இவருக்கு பிரதமர் அலுவலக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நிதி மற்றும் கல்வித்துறையிலும் இரண்டாவது மந்திரியாக செயல்படுவார்.
இவரையும் சேர்த்து லீ சியன் லூங் மந்திரிசபையில் 3 பெண்கள் கேபினட் அந்தஸ்து வகிக்கின்றனர். மற்ற இருவர் கிரேஸ் பு, ஜோசபின் தியோ ஆவர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன், தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை மந்திரியாக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சா வளியை சேர்ந்த ஜனில் புதுசேரி, போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்படுகிறார் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்தார்.
இதில் இந்திய-சீன வம்சாவளியை சேர்ந்த பெண் தலைவர் இந்திராணி ராஜா (வயது 55) கேபினட் மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் 2006-11 காலகட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து உள்ளார். இந்தியரான இவரது தந்தை ராஜா, மூத்த போலீஸ் அதிகாரியாக பணி ஆற்றியவர். இவரது தாயார் சீனர்.
இவருக்கு பிரதமர் அலுவலக பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நிதி மற்றும் கல்வித்துறையிலும் இரண்டாவது மந்திரியாக செயல்படுவார்.
இவரையும் சேர்த்து லீ சியன் லூங் மந்திரிசபையில் 3 பெண்கள் கேபினட் அந்தஸ்து வகிக்கின்றனர். மற்ற இருவர் கிரேஸ் பு, ஜோசபின் தியோ ஆவர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த எஸ்.ஈஸ்வரன், தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை மந்திரியாக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய வம்சா வளியை சேர்ந்த ஜனில் புதுசேரி, போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரியாக நியமிக்கப்படுகிறார் எனவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X