என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை பத்திரிக்கை ஆசிரியர் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி. கைது
Byமாலை மலர்14 Feb 2018 10:35 AM GMT (Updated: 14 Feb 2018 10:35 AM GMT)
இலங்கை பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் ஓய்வு பெற்ற டி.ஐ.ஜி.யை இலங்கை போலீசார் இன்று கைது செய்தனர்.
கொழும்பு:
இலங்கையில் 'சண்டே லீடர்' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த லசந்த விக்ரமதுங்க கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவர் அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் ராஜபக்சே குறித்து விமர்சித்த ஒரே பத்திரிக்கையாளர். அவரது மரணத்திற்கு ராஜபக்சே அரசு தான் காரணம் என கூறப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் முன்னாள் டி.ஐ.ஜி. பிரசன்னா நாணயக்காரை இலங்கை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது மேற்கு மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் இந்த வழக்கில் கைது செய்யப்படும் இரண்டாவது அதிகாரி ஆவர். இதற்கு முன் கடந்த 3-ம் தேதி முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறிசேனா அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
இலங்கையில் 'சண்டே லீடர்' என்ற பத்திரிக்கையை நடத்தி வந்த லசந்த விக்ரமதுங்க கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவர் அப்போது ஆட்சியில் இருந்த அதிபர் ராஜபக்சே குறித்து விமர்சித்த ஒரே பத்திரிக்கையாளர். அவரது மரணத்திற்கு ராஜபக்சே அரசு தான் காரணம் என கூறப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் முன்னாள் டி.ஐ.ஜி. பிரசன்னா நாணயக்காரை இலங்கை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட போது மேற்கு மாகாணத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் இந்த வழக்கில் கைது செய்யப்படும் இரண்டாவது அதிகாரி ஆவர். இதற்கு முன் கடந்த 3-ம் தேதி முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறிசேனா அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X