என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: போப் ஆண்டவர் வேண்டுகோள்
Byமாலை மலர்17 April 2017 3:57 AM GMT (Updated: 17 April 2017 3:57 AM GMT)
சிரியாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என போப் ஆண்டவர் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
வாடிகன் சிட்டி:
ஈஸ்டர் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர் ஆற்றிய ஈஸ்டர் தின உரையில், அண்மையில் சிரியாவில் விஷ வாயு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து உருக்கத்துடன் குறிப்பிட்டார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசும்போது கூறியதாவது:-
போர், பஞ்சம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமை ஆகியவற்றால் உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சிரியா நாட்டு மக்கள் மீது தொடர்ந்து பயங்கரம் விதைக்கப்படுகிறது. அவர்கள் மரணத்தை சந்தித்து வருகின்றனர். தப்பியோடிய சிரியா அகதிகள் மீது மிக இழிவான தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இதேபோல் ஏசுநாதர் அவதரித்த புனித பூமி மற்றும் ஈராக், ஏமன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் அமைதி நிலவிடவேண்டும். உலக நாடுகளின் தலைவர்கள் ஆயுத வியாபாரத்தை கைவிட்டு அமைதியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ், வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர் ஆற்றிய ஈஸ்டர் தின உரையில், அண்மையில் சிரியாவில் விஷ வாயு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டது குறித்து உருக்கத்துடன் குறிப்பிட்டார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் பேசும்போது கூறியதாவது:-
போர், பஞ்சம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமை ஆகியவற்றால் உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சிரியா நாட்டு மக்கள் மீது தொடர்ந்து பயங்கரம் விதைக்கப்படுகிறது. அவர்கள் மரணத்தை சந்தித்து வருகின்றனர். தப்பியோடிய சிரியா அகதிகள் மீது மிக இழிவான தாக்குதலும் நடத்தப்பட்டு உள்ளது.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இதேபோல் ஏசுநாதர் அவதரித்த புனித பூமி மற்றும் ஈராக், ஏமன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திலும் அமைதி நிலவிடவேண்டும். உலக நாடுகளின் தலைவர்கள் ஆயுத வியாபாரத்தை கைவிட்டு அமைதியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X