என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உக்ரைனில் ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் பலி
Byமாலை மலர்26 March 2017 4:59 PM GMT (Updated: 26 March 2017 4:59 PM GMT)
உக்ரைன் நாட்டில் சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதை தொடர்ந்து, ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெய்வ்:
உக்ரைன் நாட்டில் சிறிய ரக ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதில் ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு பைலட்களும், மூன்று பயணிகள் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சோவியத் வடிவமைத்த Mi-2 ரக ஹெலிகாப்டர் ரமாடோஸ்க் பகுதியை கடக்கும் போது வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் பெரும்பாலும் மின் கம்பத்தில் உரசியதாலேயே வெடித்திருக்க கூடும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் வெடித்த விபத்தில் ஐந்து பேர் பலியாகியிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X