என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஜினியின் இலங்கை பயணம் ரத்து : முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே கருத்து
Byமாலை மலர்26 March 2017 2:24 PM GMT (Updated: 27 March 2017 3:52 AM GMT)
இலங்கை செல்ல இருந்த ரஜினிகாந்த் தனது பயணத்தை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பு:
இலங்கையில் உள்ள வவுனியாவில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார்.
ரஜினி இலங்கை செல்வதற்கு தமிழகத்தில் உள்ள சில தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பு காணப்பட்டது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தற்போது உள்ள சூழ்நிலையில் ரஜினி இலங்கை செல்வது சரியல்ல எனத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். உடனே, தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளதாக லைகா நிறுவனம் கூறியது. இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டிவிட்டரில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல் கட்சியினர் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். நடிகர் ரஜினியாக இருந்தாலும் உதவ அனுமதிக்கமாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள வவுனியாவில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது, இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார்.
ரஜினி இலங்கை செல்வதற்கு தமிழகத்தில் உள்ள சில தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பு காணப்பட்டது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் தற்போது உள்ள சூழ்நிலையில் ரஜினி இலங்கை செல்வது சரியல்ல எனத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார். உடனே, தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்துள்ளதாக லைகா நிறுவனம் கூறியது. இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே டிவிட்டரில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ”தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல் கட்சியினர் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். நடிகர் ரஜினியாக இருந்தாலும் உதவ அனுமதிக்கமாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X