என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்கா: மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலி
Byமாலை மலர்24 March 2017 12:04 AM GMT (Updated: 24 March 2017 12:04 AM GMT)
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் வடக்கு பகுதியில் இருக்கும் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வங்கி ஒன்றில் நேற்று நுழைந்த மர்மநபர் ஒருவர் தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியாகினர். இதையடுத்து அங்கு விரைந்த விஸ்கான்சின் மாகாண போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அதிரடியாக கைது செய்தனர். நேற்று முன்தினம் பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய நிலையில் அமெரிக்காவிலும் இதே போல் சம்பவம் நிகழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் துப்பாக்கிச் சூடு குறித்து தீவிர விசாரணை நடத்திவரும் போலீசார், கைது செய்யப்பட்ட நபர் குறித்த தகவலளிக்க மறுத்து விட்டனர்.
அமெரிக்காவில் அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலிஸ் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் வடக்கு பகுதியில் இருக்கும் விஸ்கான்சின் மாகாணத்திலுள்ள வங்கி ஒன்றில் நேற்று நுழைந்த மர்மநபர் ஒருவர் தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 4 பேர் பலியாகினர். இதையடுத்து அங்கு விரைந்த விஸ்கான்சின் மாகாண போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை அதிரடியாக கைது செய்தனர். நேற்று முன்தினம் பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய நிலையில் அமெரிக்காவிலும் இதே போல் சம்பவம் நிகழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் துப்பாக்கிச் சூடு குறித்து தீவிர விசாரணை நடத்திவரும் போலீசார், கைது செய்யப்பட்ட நபர் குறித்த தகவலளிக்க மறுத்து விட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X