என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்தில் குழந்தையை அடித்துக்கொன்ற இந்திய தந்தை கைது
Byமாலை மலர்21 March 2017 5:14 AM GMT (Updated: 21 March 2017 5:14 AM GMT)
இங்கிலாந்தில் பெற்ற குழந்தையை அடித்துக் கொன்ற இந்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
லண்டன்:
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் பிந்த்யா சாகர்தாஸ் (33). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் .இவர் லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணி புரிந்தார்.
இவர் ருமேனியாவை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். திருமணம் செய்யாமல் இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு ருமேனிய பெண் தனது வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து எனது குழந்தைகளை கொன்று விட்டார்கள் என கூறி கூச்சலிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பாத்ரூமில் 2 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
பெண்குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது குழந்தைகளை தந்தை பிந்த்யா சாகர்தாஸ் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. தனது காதலியுடன் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் பிந்த்யா சாகர்தாஸ் (33). இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் .இவர் லண்டனில் உள்ள ஒரு ஓட்டலில் வரவேற்பாளராக பணி புரிந்தார்.
இவர் ருமேனியாவை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். திருமணம் செய்யாமல் இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக்குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு ருமேனிய பெண் தனது வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து எனது குழந்தைகளை கொன்று விட்டார்கள் என கூறி கூச்சலிட்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பாத்ரூமில் 2 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
பெண்குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது குழந்தைகளை தந்தை பிந்த்யா சாகர்தாஸ் சுத்தியலால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. தனது காதலியுடன் ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X