என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது - ஐ.நா சபையில் இந்தியா வாதம்
Byமாலை மலர்1 March 2017 1:39 PM GMT (Updated: 1 March 2017 1:39 PM GMT)
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள மனித உரிமைகள் ஆணைய அமர்வின் 34-வது கூட்டம் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். குறிப்பாக வளைகுடா நாடுகளில் போரில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பது குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெற்றன.
இந்தியா சார்பில் பங்கேற்றுப் பேசிய ஐ.நா-வுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி அஜித் குமார் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.
கூட்டத்தில் அவர் பேசியபோது, “பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை உருவாக்கி அனுப்பியது. ஆனால், அது தற்போது உருவாக்கியவர்களை விழுங்கி வருகிறது. காஷ்மீரை சொந்தம் கொண்டாட பாகிஸ்தான் தேவையற்ற ஆவணங்களை ஐ.நா.விடம் அளித்து தீர்மானத்தை நிறைவேற்றி, தவறான வழிமுறையை கையாண்டு காஷ்மீரின் சில பகுதிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
காஷ்மீர் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இந்தியா செயல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகளின் சபையில் உள்ள மனித உரிமைகள் ஆணைய அமர்வின் 34-வது கூட்டம் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசினர். குறிப்பாக வளைகுடா நாடுகளில் போரில் சிக்கித் தவிக்கும் மக்களை பாதுகாப்பது குறித்த முக்கிய விவாதங்கள் நடைபெற்றன.
இந்தியா சார்பில் பங்கேற்றுப் பேசிய ஐ.நா-வுக்கான நிரந்தர இந்தியப் பிரதிநிதி அஜித் குமார் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்தார்.
கூட்டத்தில் அவர் பேசியபோது, “பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை உருவாக்கி அனுப்பியது. ஆனால், அது தற்போது உருவாக்கியவர்களை விழுங்கி வருகிறது. காஷ்மீரை சொந்தம் கொண்டாட பாகிஸ்தான் தேவையற்ற ஆவணங்களை ஐ.நா.விடம் அளித்து தீர்மானத்தை நிறைவேற்றி, தவறான வழிமுறையை கையாண்டு காஷ்மீரின் சில பகுதிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
காஷ்மீர் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, இந்தியா செயல்படுத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X