என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இத்தாலியில் பனிப்பாறை சரிந்து நட்சத்திர ஓட்டல் இடிந்தது: 2 பேர் பலி
ரோம்:
இத்தாலியில் அப்ருஷ் ஷோ மாகாணத்தில் கிரான் சாஸ்சோ மலைப்பகுதி உள்ளது. தற்போது குளிர் காலம் என்பதால் அப்பகுதி முழுவதும் பனி உறைந்து காணப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் 4 தடவை நில நடுக்கங்கள் ஏற்பட்டன. அச்சம்பவம் நடந்த ஓரிரு மணி நேரத்தில் கிரான் சாஸ்கோ மலைப்பகுதியில் இருந்த பனிப்பாறைகள் சரிந்தன.
மலையின் அடிவாரத்தில் 4 நட்சத்திர சொகுசு ஓட்டல் உள்ளது. பனிப்பாறை சரிந்ததில் அந்த ஓட்டல் இடிந்தது.
இதனால் ஓட்டலில் தங்கியிருந்தவர்கள், ஊழியர்கள் இடிபாடுகள் மற்றும் ஐஸ் பாறை கட்டிக்குள் சிக்கி தவிக்கின்றனர். தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.
இடிபாடுகளில் சிக்கி தவித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து 2 உடல்கள் மீட்கப்பட்டன.
அதே நேரத்தில் 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அந்த ஓட்டல் முழுவதும் இடிந்து தரை மட்டமாகி விட்டது. எனவே அங்கு இருந்தவர்களில் பெரும்பாலானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்