என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குவைத்: கிளியால் அம்பலமான கணவரின் கள்ளத்தொடர்பு- போலீசில் மனைவி புகார்
Byமாலை மலர்28 Oct 2016 11:00 AM GMT (Updated: 28 Oct 2016 11:00 AM GMT)
எண்ணைவளம் மிக்க குவைத் நாட்டில் வேலைக்காரியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவரின் நடவடிக்கையை வளர்ப்பு கிளியின் மூலம் அறியவந்த ஒருபெண் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
குவைத்:
குவைத் நாட்டின் ஹவாலி பகுதியில் வசித்துவரும் ஒரு செல்வந்தர் தனது மனைவி வீட்டில் இல்லாதபோது, வீட்டுவேலை செய்யும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.
அவரது மனைவிக்கு இதுதொடர்பாக சில மாதங்களாக சந்தேகம் வலுத்துவந்த நிலையில், வேலைக்காரியுடன் அவர் பேசும் ‘காதல் மொழிகளை’ அச்சுஅசலாக அந்த வீட்டின் வளர்ப்புக் கிளி பேச ஆரம்பித்ததால், இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது கணவர் தன்னை ஏமாற்றி, நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர போலீசார் ஆலோசித்துவரும் நிலையில் இவ்வழக்கில் ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கு தேவையான போதிய சாட்சிகள் இல்லை என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிளியை சாட்சியாக ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், மேற்படி ‘காதல் மொழிகளை’ வானொலி அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டுவிட்டுகூட, அந்த வீட்டில் வளரும் கிளி திருப்பிச் சொல்லியிருக்கலாம் அல்லவா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
குவைத் நாட்டின் ஹவாலி பகுதியில் வசித்துவரும் ஒரு செல்வந்தர் தனது மனைவி வீட்டில் இல்லாதபோது, வீட்டுவேலை செய்யும் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார்.
அவரது மனைவிக்கு இதுதொடர்பாக சில மாதங்களாக சந்தேகம் வலுத்துவந்த நிலையில், வேலைக்காரியுடன் அவர் பேசும் ‘காதல் மொழிகளை’ அச்சுஅசலாக அந்த வீட்டின் வளர்ப்புக் கிளி பேச ஆரம்பித்ததால், இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தனது கணவர் தன்னை ஏமாற்றி, நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர போலீசார் ஆலோசித்துவரும் நிலையில் இவ்வழக்கில் ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கு தேவையான போதிய சாட்சிகள் இல்லை என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.
கிளியை சாட்சியாக ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் அனுமதிக்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், மேற்படி ‘காதல் மொழிகளை’ வானொலி அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்டுவிட்டுகூட, அந்த வீட்டில் வளரும் கிளி திருப்பிச் சொல்லியிருக்கலாம் அல்லவா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X